Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏய் ஏய் அக்கடச்சூடு.. போட்டோவுக்காக தூங்கி கொண்டிருந்த குழந்தையை அடித்து எழுப்பிய நடிகர் பாலகிருஷ்ணா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை ஓங்கி அடித்து எழுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

என்டி ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். அவரின் நடன அசைவுகளை மீம் போட்டு பலர் கிண்டல் செய்வது வழக்கம்.

கோபத்தில் அவரது கைகளில் நரம்பு வித்தியாசமாக கிராப்பிக் செய்யப்படுவதையும் ரசிகர்கள் டிரோல் செய்யாமல் விடுவதில்லை. அந்த வகையில் நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டவர்.

படப்பிடிப்பின் போது

படப்பிடிப்பின் போது

கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பின் போது தனது காலணியில் அவிழ்ந்து கிடந்த லேசை கட்டாமல் பேசிக் கொண்டிருந்ததாக தனது உதவியாளரை அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அன்று முதல் அவர் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிட்டது. அவர் நடிகர், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

தெலுங்கு ஊடகம்

தெலுங்கு ஊடகம்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் ஏ.ஆர். ரஹ்மானை இழிவுப்படுத்தி பேசியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் குறித்த கேள்விக்கு விருதுகள் எப்போதும் என் கால் தூசிக்கு சமம். யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் வாங்கியிருக்காராமே. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்டிஆரில் சுண்டு விரலுக்கு சமம்.

 ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

அவர் ஒரு முறை ஆஸ்கர் விருதை வாங்கிவிட்டால் அது பெரிய விஷயமல்ல. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவரது பாடல் ஹிட்டாகிறது. எந்த ஒரு உயரிய விருதும் எனது குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைகளுக்கு ஈடாகாது. அதனால் எங்கள் குடும்பத்துக்கு முன் இந்த விருதுகள் தான் வெட்கப்பட வேண்டும் என அவர் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கிரகபிரவேசம்

கிரகபிரவேசம்

அத்துடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரான் ஆகியோரையும் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் ரசிகர் ராமு என்பவரின் வீட்டு கிரகபிரவேசத்திற்கு பாலகிருஷ்ணா அழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்தவுடன் அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தூங்கும் குழந்தையை அடித்து எழுப்பிய பாலகிருஷ்ணா

அப்போது ஒரு ரசிகர் தனது குழந்தையை தோளில் போட்ட படியே வந்து புகைப்படம் எடுக்க விரும்பினார். அப்போது குழந்தை தூங்கி கொண்டிருந்ததை கண்ட அவர், அந்த குழந்தையின் முதுகில் ஓங்கி அடித்து எழுப்பினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. மீண்டும் பாலகிருஷ்ணா விமர்சனத்துக்குள்ளாகப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+