விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்.. தரையிறங்கும்போது வெடித்து சிதறிய டயர்! பயணிகள் அலறல்
ஹைதராபாத்: ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது திடீரென விபத்தில் சிக்கியது. ஹைதராபாத்தில் இருந்து ஃபூகெட்டுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறைகளில் ஒன்று விமான போக்குவரத்து. இருப்பினும், அதிலும் கூட சில பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். அதுபோல விமானங்களில் நடக்கும் விபத்துகள் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தின் முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அது விபத்தில் சிக்கியுள்ளது.
ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 (VT-BWQ) விமானம், புக்கெட்டில் தரையிறங்கியபோது தான் இந்த சம்பவம் நடந்தது. இதன் காரணமாக விமானத்தின் முன்புற சக்கரம் கழன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
விமானம் ஓடுதளத்தில் சிக்கியதால், புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த விபத்தை பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும், இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications