ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு!
ஹைதராபாத்: ஆந்திரா மாநிலத்துக்கு 3 தலைநகர் அமைக்கப்படும் என்ற முடிவை கைவிடுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆந்திராவின் தலைநகராக அமராவதி நகர் உருவாக்கப்படும் என அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 34,000 ஏக்கர் நிலத்தையும் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆந்திராவுக்கான புதிய தலைநகராக அமராவதி நகரம் உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் 2019 ஆந்திரா தேர்தலில் வெற்றி பெற்றார் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்
அவர் முதல்வரான உடனேயே ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் இருக்கும்; நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், சட்டசபைத் தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்நூல் செயல்படும் என அறிவித்தார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

100க்கும் மேற்பட்டோர் வழக்கு
இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்ட சட்டத்துக்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்டோர் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மத்திய அரசும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசோ, இது முழுவதும் மாநில அரசுடன் தொடர்புடையது. மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றது.

வழக்கு விசாரணை
இதனிடையே அண்மையில் மூன்று தலைநகர விவகாரம் தொடர்பாக திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று நீதிபதி பி.கே.மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பாக 3 தலைநகரங்களை எதிர்க்கும் வழக்கின் விசாரணை நடைபெற்றது.

3 தலைநகரங்கள் வாபஸ்
இந்த விசாரணையின் போது அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம், 3 தலைநகரங்கள் தொடர்பான சட்டங்களை திரும்பப் பெறுவது என அரசு முடிவெடுத்துள்ளது; இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பார் என்றார். இதனைத் தொடர்ந்து அட்வகேட் ஜெனரல் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். பின்னர் மாநில அமைச்சரவை அவசரமாக கூடி 3 தலைநகரங்கள் தொடர்பான சட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications