பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா.. 300 வீடியோ? மொத்த ஆந்திராவையும் விடிய விடிய அதிர வைத்த போராட்டம்
ஹைதராபாத்: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதியில் உள்ள பெண்கள் குளியலறையில், ரகசிய கேமரா வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவானதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்தினர் தயங்குவதாக கூறி விடிய விடிய மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றமான நிலை ஏற்பட்டது.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், குட்லவல்லேருவில் மிகப்பெரிய பொறியியல் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதி கழிவறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கேமராக்களை மாணவிகள் கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு மாணவ மாணவிகள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிடெக் இறுதியாண்டு படிக்கும் விஜய், தனது தோழியுடன் சேர்ந்து கேமராக்களை வைத்ததாகவும், அதில் 300 வீடியோவிற்கு மேல் பதிவானதாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தின் போது கூறினார்கள். மேலும் கேமராக்களை வைத்து வீடியோக்களை எடுத்து விற்றதாக குற்றம் சாட்டி மாணவ மாணவிகள் ஏராளமானோர் நள்ளிரவில் போராட்டத்தில் இறங்கினர். எனினும் இந்த விவகாரத்தில் மாணவர் விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் தயங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள் விஜய்யை அடிக்க பாய்ந்தனர். இதனால் நள்ளிரவில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் குட்லவல்லேரு போலீசார் கல்லூரி விடுதிக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர். இதையடுத்து விஜய்யை அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீசார், அவரிடம் இருந்த லேப்டாப் மற்றும் செல்ஃபோனை பறிமுதல் செய்தனர். கேமராக்களை அமைப்பதில் விஜய்க்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மாணவியின் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இப்பிரச்னை குறித்து தெரிந்தும், கல்லூரி நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றம்சாட்டித்தான் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடியற்காலை 3.30 மணி வரை நீடித்த இந்த போராட்டம், மாணவர் விஜய்யை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற பிறகே முடிவுக்கு வந்தது.

இதனிடையே கிருஷ்ணா மாவட்ட எஸ்பி கந்தாதர் ராவ் வெளியிட்ட அறிவிப்பில்," சம்பந்தப்பட்ட கல்லூரியின் விடுதியில் நாங்கள் சோதனை செய்த மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கேமராக்கள் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. சந்தேகமடைந்த மாணவர்களின் மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற சாதனங்களை மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் முன்னிலையில் சோதனை செய்தோம். அதில் வீடியோக்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இந்த பிரச்னை குறித்து மாணவிகள் கவலைப்பட தேவையில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications