ஆந்திராவில் அதளபாதளத்துக்கு சென்ற டிடிபி... முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு!
ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடனே சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்ற நடைபெற்றது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜெகன் அமோக வெற்றி
லோக்சபா மற்றம் சட்டசபை இரண்டு தேர்தல்களிலும் தெலுங்குதேசம் கட்சியை விரட்டியடித்துள்ளது ஒய்எஸ்ஆர்சி. 175 சட்டசபை தொகுதிகளில் 152 தொகுதிகளை கைப்பற்றிருக்கிறது ஜெகனின் கட்சி.

ஜன சேனாவுக்கு ஒரு இடம்
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 22 மட்டுமே கைப்பற்றியுள்ளது. பவன் கல்யானின் ஜன சேனா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்முரம்
நாடாளுமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர்சி 22 இடங்களையும் தெலுங்கு தேசம் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத சந்திரபாபு நாயுடு மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க மும்முரமாக இருந்தார்.

துடைத்தெறியப்பட்டுள்ளது
டெல்லி, கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் என மாநிலம் மாநிலமாக சென்று அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வந்தார். இந்நிலையில் அவரது கட்சி நடந்து முடிந்த 2 தேர்தல்களிலும் ஜெகன் மோகன் ரெட்டியால் துடைத்தெறியப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு ராஜினாமா
இந்நிலையில் தனது முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்துள்ளார். இன்று அம்மாநில ஆளுநரை சந்தித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications