சென்னை மழை போல தெலுங்கானா தேர்தலில் கரைபுரண்டோடிய 'சரக்கு வெள்ளம்'! 3மாநிலங்களில் இருந்து இறக்குமதி!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தேர்தல் சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் மதுபான விநியோகம் கரைபுரண்டோடியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவின் 119 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தெலுங்கு பேசும் மாநிலம் ஒன்றில் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட முடியும் என்பது காங்கிரஸ் நம்பிக்கை. தெலுங்கானாவின் அசைக்க முடியாது என 3-வது முறையாக வெல்வோம் என காத்திருக்கிறது பிஆர்எஸ். தெலுங்கானாவில் இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தெலுங்கானா தேர்தலில் பெருமளவு பணம், மதுபானம் விநியோகம் வெள்ளம் போல கரைபுரண்டோடியது. அதுவும் இந்த முறை ஆந்திரா, ஒடிஷா, சத்தீஸ்கர் என 3 மாநிலங்களில் இருந்தும் மதுபானங்கள் பெருமளவு எல்லை கிராமங்கள் குவிக்கப்பட்டு அங்கிருந்து அனைத்து தொகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டதாம்.
ஆந்திராவை ஒப்பிடுகையில் தெலுங்கானாவில் மதுபான விலை குறைவாகத்தான் இருந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் தெலுங்கானாவில் மதுபான விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டது. இதனால் 'ஆந்திரா' சரக்குகள் எல்லை கிராமங்களில் குவிக்கப்பட்டு அங்கிருந்து தொகுதிகளுக்குள் சப்ளை செய்யப்பட்டதாம். செக்போஸ்ட் இல்லாத புதிய புதிய வழிகளை இதற்காக அரசியல் கட்சிகள் ' உருவாக்கி' மதுபானங்களை பிரதான பரிசுபொருளாக தேர்தல் களத்தில் இறக்கிவிட்டனவாம்.

ஒடிஷா, சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களின் உள்ளூர் சரக்குகளும் கள்ள சாராயமும் தெலுங்கானாவில் போட்டி போட்டு களமிறக்கப்பட்டிருக்கிறதாம். தெலுங்கானா தேர்தலில் பகிரங்கமாகவே வாக்காளர்களுக்கு மதுவிநியோகம், இறைச்சி விநியோகம் கொடி கட்டிப் பறக்கிறது என்கின்றன ஊடக செய்திகள்.












Click it and Unblock the Notifications