ஆஸ்திரேலியா துப்பாக்கி சூடு.. 15 பேர் உயிரை பறித்த நபர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்! வெளியான புது தகவல்
ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. யூத பண்டிகைக்காகத் திரண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தக் கொடூரத்தை அரங்கேறிய இரு பயங்கரவாதிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அந்த நபர், தனது மகனுடன் சேர்ந்த இந்த மோசமான தாக்குதலை நடத்தியுள்ளான்.
கடந்த ஞாயிறு அன்று ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது. அன்றைய தினம் யூத பண்டிகைக்காக சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் யூதர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இருவர் திடீரெனத் தங்கள் துப்பாக்கியால் மக்களை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். இதில் 15 பேர் உயிரிழந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது..

இந்தியாவைச் சேர்ந்தவர்
இதற்கிடையே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட சஜித் அக்ரம் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் முதலில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனத் தகவல் பரவிய நிலையில், அவர் இந்தியாவில் வசித்தவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
சஜித் அக்ரம், தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்தவராம். இந்தத் தகவலை தெலுங்கானா போலீசார் உறுதி செய்துள்ளனர். 1998ல் இவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அதன் பிறகு 27 ஆண்டுகளில் ஆறு முறை மட்டுமே இந்தியாவுக்கு வந்துள்ளார். 1998 வரை அவர் இந்தியாவில் வசித்த நிலையில், அப்போது வரை அவர் மீது எந்தவொரு குற்ற வழக்குகளும் என்பதையும் ஹைதராபாத் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
என்ன நடந்தது
சஜித் தனது மகன் நவீத் அக்ரமுடன் சேர்ந்து, ஹனுக்கா பண்டிகை கொண்டாடிய யூதர்களைக் குறிவைத்து ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூரத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். சஜித் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதேநேரம் அவரது மகன் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்பதால் அவருக்கு ஆஸ்திரேலியக் குடியுரிமை இருந்துள்ளது. இச்சம்பவத்தில் போலீஸ் கொடுத்த பதிலடியில் சஜித் உயிரிழந்தார்.. நவீத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்து சென்றுவிட்ட நிலையில், அவர் தீவிரவாதத்தை நோக்கிச் சென்றதற்கும் இந்தியாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என ஹைதராபாத் போலீசார் கூறியுள்ளனர்.
தொடர்பு இல்லை
சஜித் அக்ரம் கிறிஸ்துவப் பெண்ணை மணந்ததால் அவரது குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதில்லையாம். பல ஆண்டுகளாகவே குடும்பத்தினர் அவரது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாரும் சஜித் அக்ரம் உடன் தொடர்பில் இல்லையாம். ஐரோப்பியக் கிறிஸ்தவப் பெண் வெனெரா க்ரோசோவை மணந்த இவருக்கு நவீத் தவிர ஒரு மகளும் உண்டு என சொல்லப்படுகிறது. இதில் சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார். அதேநேரம் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவரது இரு குழந்தைகளும் ஆஸ்திரேலியக் குடிமக்கள் ஆவர்.
சகோதரர் பகீர்
ஐதராபாத்தில் வசிக்கும் சஜித் சகோதரர் நியூஸ் மினிட் தளத்திற்கு இது குறித்துக் கூறுகையில், "25 ஆண்டுகளுக்கு முன் சஜித் படிப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றார். அப்போது கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் குடும்பத்தினர் யாரும் அவருடன் பேசுவதில்லை. ஒல்ட் ஹைதராபாத்தில் தான் எங்கள் குடும்பத்தினர் வசிக்கிறோம். ஆனால், அவர் எங்களுடன் பேசவில்லை. 2009ல் தந்தை இறந்தபோதும் சஜித் இந்தியாவுக்கு வரவில்லை. 80 வயதான தாய்க்கு உடல்நிலை சரியில்லை. அது குறித்து விசாரித்தது கூட இல்லை" என்கிறார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications