ஸ்வீட் வாங்க போன மாப்பிள்ளை.. முதலிரவில் புதுப்பெண் செய்த காரியம்.. கல்யாணே வீடே நடுங்கிப்போச்சு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: உற்சாகம் களை கட்டியிருந்த திருமண வீட்டில் மணப்பெண் செய்த திடீர் காரியம் திருமணை வீட்டை மட்டுமின்றி ஆந்திராவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இனிதே திருமணம் நடந்து முடிந்த நிலையில், மணப்பெண்ணின் அந்த ஒரு முடிவு திருமண வீட்டை மீளா துயரில் ஆழ்த்திவிட்டது.

திருமண வீட்டில் உற்றார், உறவினர்கள் எல்லாரும் வருகை தந்து மணமக்களை மனதார வாழ்த்திவிட்டுச் சென்ற சில மணி நேரங்களில், திருமண வீடு துக்க வீடாக மாறிய துயர சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. முதலிரவுக்கு ஏற்பாடு செய்த நேரத்தில் புதுப்பெண் எடுத்த முடிவால் மொத்த திருமண வீடே மீளாத துயரில் உறைந்துவிட்டது. அப்படி என்னதான் நடந்தது? என்பது குறித்த விவரம் வருமாறு:-

bride-takes-tragic-decision-on-the-night-of-her-wedding-in-andhra-pradesh

சிறப்பாக நடந்து முடிந்த திருமணம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டத்தில் உள்ள சோமந்தூர்பள்ளி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 22). இவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்றது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது. திருமண வீட்டிற்கே உள்ள உற்சாகத்துடன் காலையில் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுடன் இனிதே திருமணம் நடைபெற்றது.

திருமண வீட்டிற்கு வந்த உறவினர்களும் மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். வந்திருந்த உற்றார், உறவினர்களுக்கு உணவு விருந்தும் வழக்கம் போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே வாய்பிளக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளுடன் திருமணம் முடிந்த நிலையில், இல்லற வாழ்வை ஆரம்பிக்க புதுமணத் தம்பதிகள் தயாராகினர். சோமந்தூர்பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

ஸ்வீட் வாங்க போன மாப்பிள்ளை

இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்த நிலையில், கல்யாண மாப்பிள்ளை நாகேந்திரா ஸ்வீட் வாங்குவதற்காக வெளியே கடைக்குச் சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த கல்யாண மாப்பிள்ளை தனது மனைவியைத் தேடினார். இதற்கிடையே, வீட்டில் உள்ள அறையில் ஹர்ஷிதா இருப்பதை அறிந்து கொண்ட உறவினர்கள் கதவைத் தட்டினர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் ஹர்ஷிதாவிடமிருந்து பதில் வரவில்லை.

இதனால், பதறிப்போன உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது, அறையில் இருந்த மின் விசிறியில் கயிற்றைக் கட்டி ஹர்ஷிதா தூக்கில் தொங்குவதைக் கண்டனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதாவின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தாலிக் கயிற்றின் மஞ்சள் ஈரம் கூட காயவில்லை

இந்தக் காட்சிகள் அங்கிருந்தவர்களின் கண்களையும் குளமாக்கின. திருமணம் முடிந்து தாலிக் கயிற்றின் மஞ்சள் ஈரம் கூட காயாத நிலையில், புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹர்ஷிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே ஹர்ஷிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஹர்ஷிதாவின் பெற்றோர் மற்றும் மணமகன் நாகேந்திரா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+