தெலுங்கானாவில் பரபரப்பு.. தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே.. மயங்கி விழுந்த கேசிஆர் மகள் கே கவிதா
ஹைதராபாத்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே கவிதா திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் இப்போது கே சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கே இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது அங்கே பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க பிஆர்எஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
தெலுங்கானா தேர்தல்: அதன்படி தெலுங்கானா மாநிலம் இட்டிக்யாலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே கவிதா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே கவிதா அங்கே திறந்த வாகனத்தில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். மைக்கில் பேசிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக கவிதா திரும்பி கீழே விழு போனார். அங்கே இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதனால் பதறிய பிஆர்எஸ் நிர்வாகிகள் அவரை சூழ்ந்து கொண்டனர்.
நீர்ச்சத்து குறைபாடு: இது தொடர்பாக கவிதா தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகச் சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிறிது நேரம் பிரேக் எடுத்துக் கொண்டு கவிதா, மீண்டும் வழக்கம் போல் பிரச்சாரத்தைத் தொடங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாக வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வரும் டிச. 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தெலுங்கானாவைப் பொறுத்தவரை இப்போது அங்கே பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கே இதற்கு முன்பு 2018இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கேசிஆர் கட்சி 47.4 சதவீத வாக்குகளைப் பெற்று, அங்குள்ள 119 இடங்களில் 88 இடங்களைக் கைப்பற்றியது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 28% வாக்குகளை மட்டுமே பெற்று 19 இடங்களில் மட்டுமே வென்றது.












Click it and Unblock the Notifications