பரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்
ஹைதராபாத்: கல்வான் (கால்வன்) பள்ளத்தாக்கு மோதலில் தேசத்துக்காக வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு உயரிய ராணுவ விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரது தந்தை உபேந்திர ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் ஊடுருவலை முறியடித்ததில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். கர்னல் சந்தோஷ் பாபுதான் இந்திய வீரர்களுக்கு தலைமை ஏற்று நடத்திய ராணுவ அதிகாரி.

வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு மகா வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பாக கர்னல் சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்திரா கூறியதாவது:
சந்தோஷ் பாபுவுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கியதில் எனக்கு 100% திருப்தி இல்லை. சந்தோஷ் பாபுவின் வீரதீரத்துக்காக உயரிய ராணுவ விருதான பரம் வீர் சக்ரா வழங்கியிருக்க வேண்டும்.
என் மகனும் அவரது ராணுவ சகாக்களும் வெறும் கைகளால் யுத்தம் நடத்தி சீன வீரர்களை கொன்றனர். இந்த யுத்தம் மூலம் இந்தியாவின் வலிமையை அவர்கள் நிரூபித்து வீரமரணம் அடைந்தனர்.
வழக்கமான ராணுவ சலுகைகளைத் தவிர நாங்கள் வேறு எதனையும் பெறவில்லை. இவ்வாறு உபேந்திரா கூறினார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications