Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு சம்மன்; நாளை நுகர்வோர் மன்றத்தில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நிதி மோசடி விவகாரத்தில், நடிகர் மகேஷ் பாபுவுக்கு ₹3.4 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் நாளைக்குள் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான மகேஷ் பாபு, 'சொர்ணா குரூப்ஸ்' மற்றும் 'சாய் சூர்யா டெவலப்பர்ஸ்' ஆகிய இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரத் தூதராக இருந்து வருகிறார். இந்த இரு நிறுவனங்களும் ஒரே இடத்தை பலருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது அண்மையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த இரு நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போதுதான் மகேஷ் பாபு விளம்பரத் தூதராக இருப்பது தெரியவந்தது.

mahesh babu hyderabad

மோசடி மற்றும் நிதிப் பரிமாற்ற விவரங்கள்

ஹைதராபாத்தில் உள்ள இந்த இரு நிறுவனங்களும் அனுமதியே பெறப்படாத வீடுகளை விற்றது, ஒரே பிளாட்டை பலருக்கு விற்றது, போலியான பத்திரப் பதிவு வாக்குறுதிகளைக் கொடுத்தது எனப் பல மோசடிகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதனால், இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமலாக்கத்துறை இதுகுறித்துத் தெரிவித்ததாவது: "மகேஷ் பாபு, இந்த இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் இருந்து ₹5.9 கோடி பெற்றுள்ளார். அதில் ₹3.4 கோடி காசோலையாகவும், ₹2.5 கோடி ரொக்கமாகவும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குத் தொடரப்பட்டுள்ளது."

அமலாக்கத்துறையின் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை

நடிகர் மகேஷ் பாபு இந்த மோசடியில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அவர் விளம்பரத் தூதராக இருந்தமைக்காக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணம் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இரு ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ₹100 கோடி அளவுக்குக் கணக்கில் வராத பணம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மூலம் சம்பாதித்த ரியல் எஸ்டேட் நிறுவனர்களின் சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. நடிகர் மகேஷ் பாபு நாளைக்குள் நுகர்வோர் மன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மகேஷ் பாபுவின் பொதுநலப் பணிகள்

இந்திய சினிமாவில் அதிக அளவில் ஊதியம் வாங்கும் நடிகர்களில் மகேஷ் பாபுவும் ஒருவர். அவர் 'மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகனான மகேஷ் பாபு, 'மகேஷ் பாபு அறக்கட்டளை'யைத் தொடங்கி பலருக்கு நிதி உதவி செய்து வருகிறார். குறிப்பாக, குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி வருகிறார். இதற்காக ரெயின்போ மருத்துவமனை மற்றும் ஆந்திரா மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறார்.

மேலும், ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் தலா ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். அந்தக் கிராமங்களில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், சாலைகள், வடிகால்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா காலத்தில் அந்தக் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+