வேளாண் மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்து...தெலங்கானா முதல்வர் விமர்சனம்!!
ஹைதராபாத்: வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்துதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயனளிக்கும் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று ராஜ்ய சபாவில் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்பி திருச்சி சிவாவும் கடுமையாக தனது வாதங்களை எடுத்து வைத்து இருந்தார்.

திருச்சி சிவா பேசுகையில், ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாம்; தொழுதுண்டு பின்செல் பவர்'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி இருந்தார். முன்பு விவசாயிகளை நம்பி நாம் இருந்தோம். இன்று அவர்கள் மற்றவர்களை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த மசோத்தாக்களை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்று இருக்கும் நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதாவின்படி வணிகர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று விளை பொருட்களை வாங்கலாம். ஆனால் இவர்களது கூறுவது போல, சிறிய விவசாயிகளால் தங்களது உற்பத்தி பொருட்களை எப்படி நாட்டின் தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்க முடியும். இது சாத்தியமில்லை. நல்ல விலைக்கு இவர்களால் விற்க முடியுமா.
இந்த மசோத்தாக்கள் வேறு ஒன்றும் இல்லை. சர்க்கரை தடவிய மருந்து. இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை. கார்ப்பரேட்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விளை பொருட்களை வாங்க முடியும். தனியார் வணிகர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
விவசாயிகள், விவசாயம் சார்ந்த துறைகள், விவசாயிகளின் நலன் என்று அனைத்துக்கும் எதிராக இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என்றார்.
விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா கடந்த காலத்தில் அரசாங்கம் அறிவித்த அவசர சட்டங்களை மாற்றுவதற்காக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மசோதா விவசாயிகளுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல குறைந்தபட்ச விலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications