வேளாண் மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்து...தெலங்கானா முதல்வர் விமர்சனம்!!
ஹைதராபாத்: வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் சர்க்கரை தடவிய மருந்துதானே தவிர வேறு ஒன்றுமில்லை. இவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும்தான் பயனளிக்கும் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று ராஜ்ய சபாவில் அமளியில் ஈடுபட்டனர். திமுக எம்பி திருச்சி சிவாவும் கடுமையாக தனது வாதங்களை எடுத்து வைத்து இருந்தார்.

திருச்சி சிவா பேசுகையில், ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற் றெல்லாம்; தொழுதுண்டு பின்செல் பவர்'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி இருந்தார். முன்பு விவசாயிகளை நம்பி நாம் இருந்தோம். இன்று அவர்கள் மற்றவர்களை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த மசோத்தாக்களை ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்று இருக்கும் நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் எதிர்த்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதாவின்படி வணிகர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று விளை பொருட்களை வாங்கலாம். ஆனால் இவர்களது கூறுவது போல, சிறிய விவசாயிகளால் தங்களது உற்பத்தி பொருட்களை எப்படி நாட்டின் தொலைவில் இருக்கும் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று விற்க முடியும். இது சாத்தியமில்லை. நல்ல விலைக்கு இவர்களால் விற்க முடியுமா.
இந்த மசோத்தாக்கள் வேறு ஒன்றும் இல்லை. சர்க்கரை தடவிய மருந்து. இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை. கார்ப்பரேட்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவர்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விளை பொருட்களை வாங்க முடியும். தனியார் வணிகர்களை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
விவசாயிகள், விவசாயம் சார்ந்த துறைகள், விவசாயிகளின் நலன் என்று அனைத்துக்கும் எதிராக இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என்றார்.
விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா கடந்த காலத்தில் அரசாங்கம் அறிவித்த அவசர சட்டங்களை மாற்றுவதற்காக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மசோதா விவசாயிகளுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல குறைந்தபட்ச விலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications