Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணத்தை நிறுத்துங்க.. 2 நிமிஷத்திற்கு முன் முடிவு எடுத்த மாப்பிள்ளை.. கலங்கிய பெண்.. ஷாக் காரணம்!

அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என்று கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் இளைஞர் ஒருவர் மண மேடையிலேயே தனது திருமணத்தை நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. ஹைதராபாத் அருகே தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம் ஒன்றில் அந்த இளைஞர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பெரிதாக வருமானம் இல்லாத காரணத்தால் பெண் பார்ப்பதில் சிக்கல் இருந்துள்ளது. அதேபோல் இவருக்கு பல்வேறு தோஷங்களும் இருந்துள்ளது. இதற்கு ஏற்றபடி அவருக்கு பெண் தேடி வந்துள்ளனர்.

பெண்

பெண்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த இளைஞருக்கு பெண் பார்க்கப்பட்டது. அந்த பெண்ணிடம் பல லட்சங்களுக்கு வரதட்சணை கேட்டு இருக்கிறார் அந்த இளைஞர். ஒரு பைக். வீட்டிற்கு தேவையான அனைத்துவிதமான பர்னிச்சர்கள். பாத்திரங்கள். 50 பவுன் நகை கேட்டு இருக்கிறார். இது போக ரொக்கமாகவும் பணம் கேட்டுள்ளார். நிச்சய செலவுகளை எல்லாமே பெண்ணின் குடும்பமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த இளைஞர் கேட்டுள்ளார்.

வரதட்சணை

வரதட்சணை

அந்த பெண்ணின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அந்த பெண்ணிற்கு திருமணம் தள்ளி போய் இருந்துள்ளது. இந்த முறையும் விட்டால் திருமணம் நடப்பது கடினம் என்று அந்த பெண்ணிற்கு இந்த இளைஞரையே திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அங்கே இங்கே கடன் வாங்கி திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டனர். இதையடுத்து 3 மாதங்களுக்கு முன் அந்த பெண்ணிற்கு நிச்சயம் நடந்தது. இதற்கான அனைத்து செலவுகளையும் பெண்ணின் குடும்பத்தினர்தான் செய்தனர். அதேபோல் பெண்ணிற்கு போடுவதற்காக வரதட்சணையையும, தங்கத்தையும் ஏற்பாடு செய்துவிட்டனர்.

மேடைக்கு வரவில்லை

மேடைக்கு வரவில்லை

இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் திருமணம் நடக்க வேண்டிய நிலையில் மேடைக்கு வந்த மாப்பிள்ளை சோகமாக இருந்துள்ளார். மேடையில் சோகமாக அவர் அமர்ந்து இருந்துள்ளார். அருகே இருந்த மணப்பெண்ணிடமும் அவர் பேசவில்லை. பின்னர் உடை மாற்ற உள்ளே சென்றவர் அதன்பின் மீண்டும் மேடைக்கு வரவில்லை. உள்ளேயே இருந்தவர்.. அப்படியே திருமணத்தையும் நிறுத்தி உள்ளார். அவரின் இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதை பற்றி பெண்ணின் குடும்பத்தினர் விசாரித்ததில், நாங்க கேட்ட பர்னிச்சரை நீங்க கொடுக்கவில்லை. நீங்க கொடுத்திருக்கும் பர்னிச்சர் எல்லாம் பழசு. அதெல்லாம் உங்க வீட்டில் பயன்படுத்தப்பட்டது.

முடியாது

முடியாது


கேட்ட வரதட்சணையை கொடுத்தால்தான் கல்யாணம். இல்லையென்றால் கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதாக குறிப்பிட்டு உள்ளனர். உடை மாற்ற சென்ற போது அவர் பர்னிச்சர்களை பார்த்து உள்ளார். ஜன்னல் வழியாக பர்னிச்சகர்களை பார்த்த அவர் அது பழையது என்று கண்டுபிடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை திருமணத்தையே நிறுத்தி உள்ளார். இதையடுத்து நேற்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் இது பற்றி விசாரணை செய்து வருகின்றனர். வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாப்பிள்ளையிடம் விசாரணை நடத்திய பின் போலீசார் அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+