மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்
ஹைதராபாத்: ஒரு பெண் தனது பிறந்தவீட்டு வழியில் (பெற்றோர்/தாத்தா பாட்டி) பெற்ற சொத்து, அவருக்கு குழந்தை இல்லாமல் அவர் இறந்துபோனால், அந்தச் சொத்து அவர் கணவருக்குப் போகாது; மீண்டும் அந்தப் பெண்ணின் பிறந்தவீட்டு வாரிசுகளுக்கே போகும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு என்ன.. அதன் தீர்ப்பு என்ன என்பதை தெளிவாக பார்ப்போம்.
இந்து திருமண சட்டப்படி சொத்துரிமைப் பிரச்சனைகளில் சில சிக்கல்களுக்கு பலருக்கும் விடை தெரியாமல் இருக்கிறது. அப்படி விடை தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் விடையளித்துள்ளது. விஷயத்திற்கு வருவோம். ஒரு பாட்டிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். பாட்டி தன்னிடம் இருந்த ஒரு சொத்தை 2002-ஆம் ஆண்டு தனது முதல் பேத்திக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதாவது தானப்பத்திரம் செய்து கொடுத்தார். இதனால் முதல் பேத்தியின் பெயரில் வருவாய்த் துறை ஆவணங்கள் ஆந்திராவில் மாற்றப்பட்டன. சொத்தைப் பெற்றுக்கொண்ட சில காலத்திலேயே இறந்துவிட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை.

இதனிடையே பாட்டி தான் கொடுத்த தானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, அந்தச் சொத்தை தனது இரண்டாவது பேத்திக்கு (மனுதாரர்) உயில் மூலம் எழுதி வைத்தார். இதனிடையே பாட்டி 2012-இல் மறைந்த பிறகு, இரண்டாவது பேத்தி அந்தச் சொத்தை தன் பெயருக்கு மாற்றக் கோரி விண்ணப்பித்தார். வருவாய்த் துறை அதிகாரி அதற்குச் சம்மதித்து உத்தரவிட்டார். ஆனால், மறைந்த முதல் பேத்தியின் கணவர் ( எதிர்மனுதாரர்) இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
தானமாக வழங்கப்பட்ட சொத்தை பாட்டி ரத்து செய்தது செல்லாது என்றும், தனது மனைவிக்குச் சொந்தமான அந்தச் சொத்து தனக்கே சேர வேண்டும் என்றும் கணவர் வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட இணை ஆட்சியர், கணவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரண்டாவது பேத்தி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தார்லா ராஜசேகர் ராவ் முன்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரண்டாவது பேத்தி தரப்பு வாதிடுகையில், இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15(2)(a)-இன் படி, ஒரு பெண் தனது பெற்றோரிடமிருந்து (அல்லது முன்னோர்களிடமிருந்து) பெற்ற சொத்து, அவருக்குக் குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே செல்லும். எனவே, கணவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை. மேலும், சிவில் நீதிமன்றமும் தங்களுக்கு ஆதரவாக ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது என்று வாதிட்டார்
எதிர்மனுதாரர் தரப்பு (முதல் பேத்தியின் கணவர்): ஒருமுறை தானமாக வழங்கப்பட்ட சொத்தை பாட்டி ரத்து செய்தது சட்டப்படி செல்லாது. மனைவிக்கு வந்த சொத்து என்பதால் அது கணவருக்குத்தான் சேர வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி ராஜசேகர் ராவ் தனது தீர்ப்பில் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் விதிகளை மிகத் தெளிவாக விளக்கினார்.
- ’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
- கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா?
- சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்!
- வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 4 நாள் லீவை விடுங்க! ‘இதை’ மட்டும் கண்டிப்பாக மறக்காதீங்க!
- சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல்
சட்டப் பிரிவு 15(2)(a)வின் படி, ஒரு இந்துப் பெண் தனது தந்தை அல்லது தாயிடமிருந்து வாரிசுரிமை அடிப்படையில் பெற்ற சொத்து, அவருக்கு வாரிசுகள் (குழந்தைகள்) இல்லாத நிலையில் அவர் இறந்துவிட்டால், அது அவருடைய தந்தையின் வாரிசுகளுக்கே திரும்பச் செல்லும். இச்சட்டப்படி, பெற்றோரிடமிருந்து வந்த சொத்தில் கணவருக்கோ அல்லது கணவரின் வாரிசுகளுக்கோ எந்தப் பங்கும் கிடையாது. அந்தச் சொத்தின் மீது கணவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லாதபோது, பாட்டி செய்த தானப் பத்திர ரத்து நடவடிக்கையை அவர் கேள்வி கேட்க முடியாது. இணை ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, அந்தச் சொத்தை இரண்டாவது பேத்தியின் (மனுதாரர்) பெயருக்கு மாற்றம் செய்யும்படி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார்.
இன்னும் தெளிவாக சுருக்கமாக கூறுவது என்றால், ஒரு பெண் தனது பிறந்தவீட்டு வழியில் (பெற்றோர்/தாத்தா பாட்டி) பெற்ற சொத்து, அவருக்கு குழந்தை இல்லாமல் அவர் இறந்துபோனால், அந்தச் சொத்து அவர் கணவருக்குப் போகாது; மீண்டும் அந்தப் பெண்ணின் பிறந்தவீட்டு வாரிசுகளுக்கே போகும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பளித்துள்ளது
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்













Click it and Unblock the Notifications