Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹைதராபாத் என்கவுண்டர்.. 8 நாட்கள் நடந்த விசாரணை.. போலீசை கோபத்திற்கு உள்ளாக்கிய அந்த வாக்குமூலம்!

ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஐதராபாத் என்கவுண்டர்... மக்கள் கருத்து

    ஹைதராபாத்: ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலம் காரணமாக , போலீசாருக்கு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

    இன்று அதிகாலை இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. இந்த என்கவுண்டர் குறித்து அதிர வைக்கும் உண்மைகள், பின்னணிகள் வெளியாகி வருகிறது.

    என்ன சொன்னார்கள்

    என்ன சொன்னார்கள்

    ஹைதராபாத்தில் என்கவுண்டர் நடப்பதற்கு முன் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் அதிர்ச்சி அளிக்க கூடிய வாக்குமூலங்களை அளித்தனர். இந்த வாக்குமூலம் காரணமாக, போலீசாருக்கு அந்த குற்றவாளிகள் மீது கடுமையான கோபம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் என்கவுண்டரை தூண்டியது என்கிறார்கள்.

    எப்படி இணைத்த

    எப்படி இணைத்த

    போலீசாரிடம் அந்த குற்றவாளிகள் அன்று நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.அதன்படி அந்த பெண் பைக்கை டோல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்தில் அவரின் பைக்கை பஞ்சர் செய்துள்ளனர். பின் அந்த பெண் வர வேண்டும் என்று காத்து இருந்துள்ளனர்.

    அதன்பின் அந்த பெண் இரவு 9.25 மணிக்கு அங்கு வந்த பின், உதவி செய்வது போல முக்கிய குற்றவாளியான லாரி டிரைவர் பைக்கை வாங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

    மற்ற மூவர்

    மற்ற மூவர்

    மற்ற மூன்று ஆண்களும் அந்த பெண்ணை தாக்கிவிட்டு, அருகில் இருந்த புதருக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலில் அந்த பெண்ணின் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.அதற்கு பிறகு அந்த பெண்ணை வன்புணர்வு செய்துள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து கத்திகொண்டே இருந்தார் என்பதால், அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்துள்ளனர்.

    கொலை செய்தனர்

    கொலை செய்தனர்

    கடைசியில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். 27 கிமீ தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீஸ் அப்போது சந்தேகப்படவே இல்லை . பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து எரித்துள்ளனர்.

    போலீசாருக்கு கோபம்

    போலீசாருக்கு கோபம்

    அந்த பெண்ணுக்கு மது கொடுத்து கொடுமைப்படுத்தியது போலீசாருக்கு பெரிய அளவில் கோபத்தை உருவாக்கி உள்ளது. அந்த பெண்ணை அவர்கள் சாகும் வரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதெல்லாம் கேட்ட பின் போலீசார் அவர்கள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.

    அப்போதே பிளான்

    அப்போதே பிளான்

    அப்போதே இவர்கள் என்கவுண்டர் பிளானை போட்டு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விசாரணையின் போதே போலீசார் 4 குற்றவாளிகளையும் தாக்கி உள்ளனர். விசாரணையின் போதே இதில் இரண்டு பேரின் கைகள் உடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    ஆம், அப்போதே இவர்களை என்கவுண்டர் செய்ய முடிவு செய்துவிட்டு, சரியாக நேரம் வரும் போது தற்போது என்கவுண்டர் செய்து இருக்கிறார்கள். போலீசுக்கு இந்த வாக்குமூலம்தான் என்கவுண்டர் செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் போலீஸ் தரப்பு அவர்கள் தப்பி ஓடும் போது என்கவுண்டர் செய்தோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+