2008லேயே 3 என்கவுண்டர்.. பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்
2008ல் ஆந்திர பிரதேசத்தில் 3 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த எஸ்.பி விசி சஜ்னார்தான் தற்போது இந்த ஹைதராபாத் என்கவுண்டருக்கு அனுமதி அளித்துள்ளார்.
Recommended Video
ஹைதராபாத்: 2008ல் ஆந்திர பிரதேசத்தில் 3 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த எஸ்.பி விசி சஜ்னார்தான் தற்போது இந்த ஹைதராபாத் என்கவுண்டருக்கு அனுமதி அளித்துள்ளார். விசி சஜ்னார் தற்போது சைபராபாத் கமிஷனராக இருக்கிறார்.
ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர். தெலுங்கானா போலீஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர் செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனுமதி
இந்த என்கவுண்டருக்கு சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார்தான் அனுமதி அளித்தது. இவர் ஏற்கனவே இதுபோல என்கவுண்டர் செய்து நாடு முழுக்க பிரபலம் ஆனார். 2008ல் வாராங்கல் பகுதியில் ஸ்வப்னிகா, பிரணிதா என்ற இரண்டு கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. ஒரு தலை காதல் காரணம் இந்த ஆசிட் வீச்சு சம்பவம் நடந்தது.

யார் அவர்கள்
அப்போது ஸ்ரீனிவாச ராவ், ஹரிகிரிஷ்ணா, சஞ்சய், ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார் எஸ்பியாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். இவர்கள் 3 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்.

கொலை செய்தார்
அப்போது போலீசார் மீது இவர்கள் தாக்குதல் நடத்த என்கவுண்டர் செய்யப்பட்டனர். சரியாக சம்பவம் நடந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அப்போது அதே போல் ஹைதராபாத் கொலை வழக்கில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே வைத்து என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

அட
சம்பவம் நடந்த சைபராபாத் போலீஸ் கட்டுப்பட்டு பகுதியின் கமிஷனர் சஜ்னார்தான். அவரின் அதே ஸ்டைலில் இந்த என்கவுண்டர் தற்போது நடந்துள்ளது. இதனால் தற்போது ஹைதராபாத்தில் ஹீரோவாக சைபராபாத் கமிஷனராக இருக்கும் விசி சஜ்னார் உருவெடுத்துள்ளார்.

என்ன சர்ச்சை
2008 என்கவுண்டர் போலியானது , ஜோடிக்கப்பட்டது என்று புகார் உள்ளது. ஆனால் மக்கள் அவரை அப்போது பாராட்டினார்கள். தற்போது அதே போல் அவரின் தலைமையின் கீழ் இன்னொரு என்கவுண்டர் நடந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications