அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்.. புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது என்ன நடந்தது! 10 பாயிண்டுகள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அல்லு அர்ஜுன் விவகாரத்தில் கடைசி சில நாட்களில் என்ன நடந்தது.. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா போலீஸ், நடிகர் அல்லு அர்ஜுன் சொல்வது என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
புஷ்பா 2 சிறப்புக் காட்சிக்கு அல்லு அர்ஜுன் சென்ற போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் கடந்த சில நாட்களில் என்ன நடந்தது... ஒவ்வொரு தரப்பும் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரேவந்த் ரெட்டி:
- கடந்த வாரம் தெலுங்கானா சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, "அல்லு அர்ஜுன் வெறும் சில மணி நேரம் மட்டுமே சிறையில் இருந்தார்.. ஆனால், அவரை சந்திக்கத் தெலுங்கு சினிமா இன்டர்ஸ்டிரியே சென்றுள்ளது. அல்லு அர்ஜுனுக்கு கை, கால், கிட்னி போய்விட்டதா? அதேநேரம் நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண் குறித்து யாராவது கவலைப்பட்டீர்களா? இதன் மூலம் தெலுங்கு சினிமா உலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
- மேலும் ரேவந்த் ரெட்டி, "தியேட்டரில் பெண் உயிரிழந்துவிட்டார் எனச் சொல்லிய பிறகும் அல்லு அர்ஜுன் கிளம்பவில்லை.. வலியுறுத்திய பிறகே கிளம்பினார். அப்போதும் ரோட்ஷோ நடத்தினார்.. அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர்?" என்று காட்டமான கருத்துகளை முன்வைத்து இருந்தார்.
அல்லு அர்ஜுன்:
- இது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜுன், தான் இத்தனை காலம் சேர்த்து வைத்த நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இப்போது சில கருத்துகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார். அதேநேரம், இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம் தியேட்டரில் எந்தவொரு போலீஸ் அதிகாரியும் தன்னை சந்திக்கவில்லை எனக் குறிப்பிட்டு இருந்தார்.
தெலுங்கானா போலீஸ்:
- இருப்பினும், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தெலுங்கானா போலீஸ் நேற்று விரிவான பிரஸ் மீட்டை நடத்தியது. படத்தின் சிறப்புக் காட்சி ஓடி கொண்டு இருந்த போதே கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக அல்லு அர்ஜுனிடம் கூறியதாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஏசிபி ஒருவர் தெரிவித்தார். இருப்பினும், அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேற மறுத்துவிட்டதாகவும் படம் முடிந்த பிறகே வருவேன் என்று முதலில் கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
- அதாவது ஏசிபி குமார் இரவு 10.45 மணி முதலே அல்லு அர்ஜுனிடம் உயிரிழப்பு குறித்தும் அங்கிருந்து வெளியேறும்படியும் இது குறித்துச் சொல்ல முயன்றதாகவும் இருப்பினும் அவரது மேனேஜர் சந்தோஷ் அவரை சந்திக்கவே விடவில்லையாம். பெண் உயிரிழந்துவிட்டது சொல்லியும் நடிகர் அல்லு அர்ஜுனை அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்ல மேனேஜர் சந்தோஷ் முயலவில்லை என்கிறார்கள் போலீசார்.
- நீண்ட முயற்சிக்குப் பிறகு, இரவு 11.15 மணிக்குத் தான் அல்லு அர்ஜுனை ஏசிபி குமார் நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதை விளக்கியுள்ளார். இருப்பினும், அல்லு அர்ஜுன் படம் முடிந்த பிறகே வெளியேறுவேன் என்று சொல்லியதாக போலீசார் தெரிவித்தனர்.
- இதையடுத்து 11.40 மணிக்கு நேரடியாக இந்த விவகாரத்தில் டிசிபி நேரடியாகத் தலையிட்டுள்ளார். அல்லு அர்ஜுன் உடனடியாக வெளியேற நேரிடும் என்றும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகே ஒரு வழியாக 12.05க்கு அல்லு அர்ஜுன் அங்கிருந்து வெளியேறியதாக போலீசார் கூறுகிறார்கள். மேலும், இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
More From
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications