தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம்.. அடித்து சொன்ன அமித் ஷா!
ஐதராபாத்: தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், தெலுங்கானாவில் தேர்தல் களம் உச்சக்கட்ட அனல் பறக்க தொடங்கி விட்டது. தெலுங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.

கடந்த தேர்தலில் கூட பிஆர்எஸ் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. ஆனால், இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. மறுபக்கம் பாஜகவும் தேர்தல் களத்தில் உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் வரும் நவம்பர் 29 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, இன்று தெலுங்கானாவில் உள்ள ஜக்டியல் நகரில் தேர்தல் பிரசாரம் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அமித்ஷா பேசியதாவது:- ஓவைசிக்கு பயந்து ஐதராபாத் மீட்பு நாளை கொண்டாட சந்திரசேகர் ராவ் அச்சப்படுகிறார். ஆனால், நாங்கள் ஓவைசிக்கு அச்சப்படவில்லை. நாங்கள் ஐதராபாத் மீட்பு நாளை மாநில நாளாக கொண்டாடுகிறோம்.
ஓவைசி திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கேசிஆர் கட்சியின் சின்னம் கார் ஆகும். ஆனால் அவர்களிடம் கட்சியின் ஸ்டீரிங் (கட்டுப்பாடு) இல்லை. பாஜக ஆட்சி அமைத்தால் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அதை எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு வழங்குவோம" என்றார். பாஜக தனது தேர்தல் அறிக்கையிலும் இதை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications