ரேஷன் கார்டில் இயேசுநாதர்.. வைரலாகும் போட்டோ.. டிடிபி மீது ஜெகன் கட்சி பாய்ச்சல்.. ஆந்திரா களேபரம்!
ரேஷன் கார்டில் இயேசு நாதர் போட்டோ அச்சிட்ட சம்பவம் பரபரப்பை தந்துள்ளது
ஹைதராபாத்: ஆந்திராவில், ரேஷன் கார்டில் இயேசு கிறிஸ்துவின் உருவம் அச்சிடப்பட்ட போட்டோ சோஷியல் மீடியாவில் வெளியாகி மிகுந்த சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
போன ஆகஸ்ட் மாதம், திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் அரசு பஸ்ஸில் வழங்கிய டிக்கெட்டில் "இயேசு தான் மெய்யான கடவுள்", "ஹஜ் மற்றும் ஜெருசலேமுக்கு புனித யாத்திரை வாருங்கள்" என்று விளம்பரம் அச்சடிக்கப்பட்டிருந்தது.
அப்போது இந்த விஷயம் சர்ச்சையானது.. வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு காரியம் என்று முதல்வர் ஜெகன் மோகன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

வாசகங்கள்
அது மட்டுமல்ல.. திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "இயேசுவே மெய்யான கடவுள்" போன்ற வாசகங்களும் திடீரென இணைக்கப்பட்டதாக கூறி ஒரு பரபரப்பு அப்போது ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

இயேசு கிறிஸ்து
இம்மாநிலத்தில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளில் இயேசு கிறிஸ்துவினுடைய படம் அச்சிடப்பட்டுள்ளது.. இந்த படம் சோஷியல் மீடியாவிலும் வைரலாகி வருகிறது.. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்தான், இயேசு கிறிஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டுகளை வழங்கி உள்ளதாக தெரிகிறது.

அறிக்கை
இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஆந்திர அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.. இது தெலுங்கு தேசம் கட்சியினர் பரப்பி வரும் பிரச்சாரம் என்றும் குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெளிவுபடுத்தியும் உள்ளது.

தெலுங்கு தேசம்
"வத்லமாறு பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை அச்சிட்டு அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த நபர் மதம் மாறிய கிறிஸ்தவர் அல்ல.. அவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஆவார்.

சாய்பாபா
கடந்த 2016-ம் ஆண்டு இதே நபர் தான் குடும்ப அட்டைகளில் சாய்பாபாவின் உருவத்தையும், 2017-18 இல் விஷ்ணுவின் உருவத்தையும் அச்சிட்டுள்ளார். தற்போது இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.. இப்படி சர்ச்சை கிளப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications