இவ்வளவு கோடியா! அடையாளம் தந்த இர்பான் பதான்.. ஐபிஎல் உலகில் 2 இளம் காஷ்மீர் வீரர்கள் செய்த சாதனை!
ஹைதராபாத்; இர்பான் பதான் கண்டுபிடித்த இரண்டு ஜம்மு காஷ்மீர் வீரர்கள் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் ரிட்டென்ஷனில் மிக முக்கியமான வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த வருட இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ரிட்டென்ஷன் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த ரிட்டென்ஷனில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இளம் வீரர்களை ஹைதராபாத் அணி ரீடெயின் செய்துள்ளது. டேவிட் வார்னர் உடன் இருந்த மோதல் காரணமாக அவர் ரீடெயின் செய்யப்படவில்லை.
அதேபோல் ரஷீத் கான் ரீடெயின் செய்யப்படவில்லை. இவர் முதல் ஆப்ஷனாக தன்னை ரீடெயின் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

16 கோடி ரூபாய்
அதாவது 16 கோடி ரூபாய்க்கு தன்னை ரீடெயின் செய்ய வேண்டும் என்று ரஷீத் கேட்டதாக தகவல்கள் வந்தன. இதன் காரணமாக ரஷீத் கானை ஹைதராபாத் அணி ரீடெயின் செய்யவில்லை. இதையடுத்து கேன் வில்லியம்சன் முதல் வீரராக 14 கோடி ரூபாய்க்கு ரீடெயின் செய்யப்பட்டார். அதேபோல் அப்துல் சமாத் 4 கோடி ரூபாய்க்கும், உம்ரான் மாலிக் 4 கோடி ரூபாய்க்கும் எடுக்கப்பட்டனர்.

காஷ்மீர்
காஷ்மீரை சேர்ந்த திறமையான இரண்டு இளம் வீரர்களை ஹைதராபாத் அணி எடுத்து அசத்தி உள்ளது. இருவருக்கும் தலா 4 கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரின் இந்த சாதனைக்கு பின் இர்பான் பதான் முக்கியமான நபராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இர்பான் பதான்தான் உம்ரான் மாலிக் என்ற ஜம்மு காஷ்மீர் வீரரை அடையாளம் கண்டு ஹைதராபாத் அணிக்கு பரிந்துரை செய்தார்.

பவுலிங்
கடந்த சீசனுக்கு முன்பாகவே உம்ரான் மாலிக் பவுலிங்கை பார்த்து இர்பான் பதான்தான் பரிந்துரையை செய்தார். இவரை எடுங்கள் என்று ஹைதராபாத் அணிக்கு ஆலோசனை சொன்னார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியில் ஆடிய உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசினார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார்.

இர்பான்
இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். அதேபோல் அப்துல் சமாத் என்ற இளம் வீரரை அடையாளம் கண்டதும் பதான்தான். ஐபிஎல்லில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு சமாத்தை இவர் பரிந்துரை செய்தார்.

அடையாளம்
கடைசியில் பதான் பரிந்துரையால் சமாத் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு பெற்றார். இப்போது இவர்கள் இருவரும் அந்த அணியில் ரீடெயின் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் புதிய வாழ்க்கையை இர்பான்தான் தேடிக்கொடுத்துள்ளார். அதிலும் ஒரு அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே ரீடெயின் செய்யும் அளவிற்கு திறமையான வீரர்களை பதான் கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார்.
Recommended Video

பதான் சாதனை
காஷ்மீரில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு களம் அமைக்க வேண்டும் என்று இர்பான் பதான் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் இரண்டு வீரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications