இவ்வளவு கோடியா! அடையாளம் தந்த இர்பான் பதான்.. ஐபிஎல் உலகில் 2 இளம் காஷ்மீர் வீரர்கள் செய்த சாதனை!
ஹைதராபாத்; இர்பான் பதான் கண்டுபிடித்த இரண்டு ஜம்மு காஷ்மீர் வீரர்கள் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் ரிட்டென்ஷனில் மிக முக்கியமான வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இந்த வருட இறுதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ரிட்டென்ஷன் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. இந்த ரிட்டென்ஷனில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இளம் வீரர்களை ஹைதராபாத் அணி ரீடெயின் செய்துள்ளது. டேவிட் வார்னர் உடன் இருந்த மோதல் காரணமாக அவர் ரீடெயின் செய்யப்படவில்லை.
அதேபோல் ரஷீத் கான் ரீடெயின் செய்யப்படவில்லை. இவர் முதல் ஆப்ஷனாக தன்னை ரீடெயின் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

16 கோடி ரூபாய்
அதாவது 16 கோடி ரூபாய்க்கு தன்னை ரீடெயின் செய்ய வேண்டும் என்று ரஷீத் கேட்டதாக தகவல்கள் வந்தன. இதன் காரணமாக ரஷீத் கானை ஹைதராபாத் அணி ரீடெயின் செய்யவில்லை. இதையடுத்து கேன் வில்லியம்சன் முதல் வீரராக 14 கோடி ரூபாய்க்கு ரீடெயின் செய்யப்பட்டார். அதேபோல் அப்துல் சமாத் 4 கோடி ரூபாய்க்கும், உம்ரான் மாலிக் 4 கோடி ரூபாய்க்கும் எடுக்கப்பட்டனர்.

காஷ்மீர்
காஷ்மீரை சேர்ந்த திறமையான இரண்டு இளம் வீரர்களை ஹைதராபாத் அணி எடுத்து அசத்தி உள்ளது. இருவருக்கும் தலா 4 கோடி ரூபாய் கொடுத்து அந்த அணி ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரின் இந்த சாதனைக்கு பின் இர்பான் பதான் முக்கியமான நபராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இர்பான் பதான்தான் உம்ரான் மாலிக் என்ற ஜம்மு காஷ்மீர் வீரரை அடையாளம் கண்டு ஹைதராபாத் அணிக்கு பரிந்துரை செய்தார்.

பவுலிங்
கடந்த சீசனுக்கு முன்பாகவே உம்ரான் மாலிக் பவுலிங்கை பார்த்து இர்பான் பதான்தான் பரிந்துரையை செய்தார். இவரை எடுங்கள் என்று ஹைதராபாத் அணிக்கு ஆலோசனை சொன்னார். கடந்த சீசனில் ஹைதராபாத் அணியில் ஆடிய உம்ரான் அசால்ட்டாக 153 கிமீ வேகத்தில் பந்து வீசினார். 21 வயதே ஆன இவர் சர்வதேச அளவில் வலுவான வெளிநாட்டு வீரர்களை தனது வேகப்பந்து மூலம் திணற வைத்தார்.

இர்பான்
இவரை அடையாளம் கண்டது இர்பான் பதான்தான். இவருக்கு தனிப்பட்ட பயிற்சியையும் இர்பான் பதான் வழங்கினார். அதேபோல் அப்துல் சமாத் என்ற இளம் வீரரை அடையாளம் கண்டதும் பதான்தான். ஐபிஎல்லில் மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்கு சமாத்தை இவர் பரிந்துரை செய்தார்.

அடையாளம்
கடைசியில் பதான் பரிந்துரையால் சமாத் ஹைதராபாத் அணியில் வாய்ப்பு பெற்றார். இப்போது இவர்கள் இருவரும் அந்த அணியில் ரீடெயின் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கும் புதிய வாழ்க்கையை இர்பான்தான் தேடிக்கொடுத்துள்ளார். அதிலும் ஒரு அணி ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே ரீடெயின் செய்யும் அளவிற்கு திறமையான வீரர்களை பதான் கண்டுபிடித்துக்கொடுத்துள்ளார்.
Recommended Video

பதான் சாதனை
காஷ்மீரில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் வெளியே கொண்டு வர வேண்டும். அவர்களுக்கு களம் அமைக்க வேண்டும் என்று இர்பான் பதான் சமீபத்தில் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் இரண்டு வீரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications