ஆந்திர சட்டமன்ற குழு தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு.. நாளை பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
ஹைதராபாத்: ஆந்திர முதல்வராக ஒய்எஸ்ஆர்சி கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதில் ஆந்திர சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.

எம்எல்ஏக்கள் கூட்டம்
போட்டியிட்ட175 தொகுதிகளில் 151 தொகுதிகளை வசப்படுத்தியுள்ளது ஜெகனின் ஒய்எஸ்ஆர்சி. இந்நிலையில்
ஒய்எஸ்ஆர்சி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது.

சட்டமன்றக்குழு தலைவர்
இதில் இந்த கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி முறைப்படி தேர்வு செய்யப்படார். இதைத் தொடர்ந்து, ஆந்திர மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்.

30ஆம் தேதி பதவியேற்பு
வரும் 30ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

மோடிக்கு அழைப்பு?
இதனிடையே ஜெகன் மோகன் ரெட்டி நாளை பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை அவர் அழைப்பார் என கூறப்படுகிறது.

கடந்த தேர்தலில்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 175 தொகுதிகளில் போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 67 இடங்களில் மட்டுமே கைப்பற்றி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. இந்நிலையில் 5 ஆண்டுகள் காத்திருந்த ஜெகன் 150க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி முதல் முறையாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications