Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை
ஹைதராபாத்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சொத்து வரி பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறி கட்டிடத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் இந்த வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு பல ஆண்டுகளாக வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளது. அதாவது சொத்து வரி கட்டாமல் நிலுவையில் இருந்துள்ளது.

இதையடுத்து வரியை வசூல் செய்ய ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலமுறை ஐதராபாத் மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் வரி செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள பாக்கி தொகையும் ரூ.1.60 கோடியாக உயர்ந்தது.
இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பு கட்டிடத்தை ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- ஜெயலலிதாவுக்கு சொந்தமான குடியிருப்பை பறிமுதல் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை கடைசி வழியாக எடுக்கப்பட்டது.
இதற்கு முன் பலமுறை குடும்பத்தினர் மற்றும் சட்டபூர்வ வாரிசுகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், வரி பாக்கியை செலுத்த எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால், நடப்பு நிதியாண்டு முடிவடையும் நிலையில், வருவாய் வசூலிக்க கட்டாய அமலாக்க நடவடிக்கையாக இந்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது" என்று தெரிவித்தனர். இந்த கட்டிடம் முன்பு சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications