விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா
ஹைதராபாத்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சிக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விவசாயிகள் சாரைசாரையாக டெல்லியை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றனர்.
இவர்களை ஹரியானா, டெல்லி போலீசார் எல்லைகளில் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும் விவசாயிகளின் போர்க்கோலத்தை தடுக்க முடியவில்லை. இதையடுத்து மத்திய அரசும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது.

விவசாயிகள் போராட்டம்- காலிஸ்தான் தொடர்பு
இதனிடையே விவசாயிகளின் போராட்டத்தை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புபடுத்தி ஹரியானா முதல்வர் மனோகர் லால் கூறியிருந்தது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

அரசியல் உள்நோக்கம் கொண்டது இல்லை
இந்நிலையில் ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அப்போது, விவசாயிகளின் போராட்டங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஒருபோதும் விமர்சிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார்
விவசாயிகளின் பிரச்சனைகள் எதுவானாலும் அதனை தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு சென்று சேர வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அமித்ஷா நிபந்தனையால் வருத்தம்
ஆனால் பாரதிய கிஷான் யூனியனின் பஞ்சாப் பிரிவு தலைவர் ஜகஜித் சிங் கூறுகையில், நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா அழைப்பு விடுத்தார். இது சரியான அணுகுமுறை இல்லை. திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா முன்வராதது வருத்தம் அளிக்கிறது. நாளை விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications