1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!
ஹைதராபாத்: மத்திய கிழக்கு போர் இந்தியாவில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவுக்கு நேரடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றாலும் மக்கள் அச்சப்பட்டு அதிகளவு பெட்ரோலை வாங்குவது செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இதனால் பல பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு நிலவும் கள நிலவரத்தை நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கு பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றுமே மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருகிறது.

ஹைதராபாத்
ஆனாலும் சில இடங்களில் நிலைமை மோசமாகவே இருக்கிறது. குறிப்பாகத் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாகவே எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. அதிலும் நேற்று நகரின் பல முக்கிய பகுதிகளில் பெட்ரோல் நிரப்பவே முடியாத சூழலே இருந்தது.
பெட்ரோல் பங்குகள்
நாம் ஹைதராபாத்தில் இரவு 9.30 மணிக்கு பெட்ரோல் நிரப்பலாம் எனச் சென்றோம். இருப்பினும், பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடியே இருந்தன. 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் பங்குகள் கூட மூடப்பட்டன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. நாம் 4, 5 கிமீ வரை சென்று எதாவது ஒரு பெட்ரோல் பங்கில் ஆவது பெட்ரோல் இருக்குமா எனப் பார்த்தோம். ஆனால், எல்லா பங்கும் மூடப்பட்டே இருந்தது.
கடைசியாக ஒரே ஒரு பெட்ரோல் பங்க் திறந்து இருந்தது. அந்த பெட்ரோல் பங்கிற்கு போனாலும் அங்கு ஏகப்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றன. சினிமா தியேட்டர்களில், ஐபிஎல் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்கும் அளவுக்குக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சரி, நின்று தான் பார்ப்போம் என நாம் வரிசையில் நின்றோம். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆனது. அதன் பிறகு கூட்டம் நகரவே இல்லை. அப்படியே நின்றுவிட்டது.
பெட்ரோல் இல்லை
என்னவென்று கேட்டால் அங்கும் பெட்ரோல் காலி! உள்ளே பார்க்கும்போது பலரும் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஒரு லிட்டர் பெட்ரோலாவது கொடுங்கள் எனக் கோரிக்கை விடுத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், கையிருப்பிலேயே பெட்ரோல் இல்லாததால் பங்க் ஊழியர்கள் தங்கள் நிலைமை எடுத்துரைத்தனர். நகரில் பெரும்பாலான இடங்களிலே இதுவே சூழலாக இருக்கிறது.
வரும் காலங்களில் எங்கு நிலைமை மோசமாகுமோ என அஞ்சுகிறார்கள். ஆனால், அதிகாரிகளோ வேறு விதமாகச் சொல்கிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லையாம். சப்ளை வழக்கம் போலவே இருக்கிறதாம். பிறகு ஏன் கூட்டம் என்ற சந்தேகம் வரலாம்.. மக்கள் அனைவரும் பெட்ரோல் கிடைக்காதோ என நினைத்து டேங்கை பில் செய்கிறார்கள். கண்டெய்னர்களில் எல்லாம் வாங்கி சொல்கிறார்கள். இதுவே பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.
என்ன சிக்கல்
வழக்கமாக ஒரு லிட்டர், 2 லிட்டர் போடுபவர்களும் கூட டேங்க்கை பில் செய்கிறார்கள். இதனால் தேவை அதிகரிக்கிறது.. செயற்கைத் தட்டுப்பாடு உருவாகிறது.. அதாவது வழக்கமாக நள்ளிரவு வரை வரும் பெட்ரோல், அனைவரும் புல் டேங்க் போடுவதால் பிற்பகலிலேயே காலியாகிறது. இரவு தான் பெட்ரோல் லாரி வருவதால் இடைப்பட்ட நேரம் பெட்ரோல் பங்க் மூடப்படுகிறது. ஒரு பங்க் இதுபோல மூடப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இன்னும் பலர் திறந்திருக்கும் பங்குகளில் டேங்க்கை புல் செய்கிறார்கள். இந்த சங்கிலி தொடர் நிகழ்வே பெரிய பிரச்சினையாக மாறுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து விநியோகச் சங்கிலி முழுமையாகச் செயல்படுவதாகவும், அனைத்து மாவட்டங்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இருப்பு இருப்பதாகவும் இங்குள்ள அரசுத் துறை விளக்கம் அளித்துள்ளது. மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும் தேவையில்லாமல் வாங்கி வைக்க வேண்டாம் என்றும் தெலங்கானா பெட்ரோலிய டீலர்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
டீலர்கள் உறுதி
இது தொடர்பாக டீலர் சங்கத்தினர் கூறுகையில், "வழக்கமான விற்பனையைக் காட்டிலும் இந்த வாரம் விற்பனை 2.5 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல விற்பனை நிலையங்களில் தற்காலிகமாக எரிபொருள் இருப்பு குறைந்துள்ளது. ஆனால், தட்டுப்பாடு எதுவும் இல்லை. போதிய கையிருப்பு இருக்கிறது. விநியோக சங்கிலியும் பிரச்சினை இல்லை. தேவையில்லாமல் அதிகப்படியாக வாங்குவதை மக்கள் தவிர்த்தாலே போதும்" என்கிறார்கள்.
-
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம்












Click it and Unblock the Notifications