“தூக்கம் வராததால் 18 மாத்திரைகள் எடுத்தேன்.. தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை”: பாடகி கல்பனா வாக்குமூலம்
ஹைதராபாத்: தூக்கம் சரியாக வராததால் தான் அதிக அளவு மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல பின்னணிப் பாடகி கல்பனா, போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் வீட்டின் உள்ளே இருந்து யாரும் கதவைத் திறக்கவில்லை.

இதையடுத்து, பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினர் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து அவரது வீட்டிற்குள் போலீசார் நுழைந்தபோது சுயநினைவற்ற நிலையில் அவர் இருப்பதைக் கண்டனர். போலீசார் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி உள்ளதாகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகி கல்பனா அதிகளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டது ஏன் என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்கொலை முயற்சி தொடர்பாக போலீசார், பாடகி கல்பனாவிடம் விசாரித்தனர். அப்போது, சரியாக தூக்கம் வராத காரணத்தால் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். முதலில் எட்டு மாத்திரைகளை எடுத்தும் தூக்கம் வராததால் அதன் பிறகு மேலும் 10 மாத்திரைகளை எடுத்தேன். அதற்குப் பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. நான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கல்பனா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடகி கல்பனாவின் மகள் அளித்துள்ள பேட்டியில், "அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்னுடைய தாய் தந்தை இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். மன அழுத்தம் காரணமாக அம்மா, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரை ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை.
மற்றபடி எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, என் அம்மா, நான் மற்றும் என் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள், அது சங்கடத்தில் ஆழ்த்துகிறது. அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்" எனக் கூறி உள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர். இவருடைய தந்தை டிஎஸ் ராகவேந்தர் நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர். கல்பனாவின் அம்மா சுலோச்சனாவும் பின்னணி பாடகர். பாடகி கல்பனா 1500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications