‘ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் பணம் சம்பாதிக்கவில்லை’ .. ED விசாரணை குறித்து பிரகாஷ் ராஜ் விளக்கம்
ஹைதராபாத்: ஆன்லைன் சூதாட்ட ஆப்புக்கு விளம்பரம் செய்த வழக்கில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்படி பிரகாஷ் ராஜிடம் அமலாக்கத்துறையினர் இன்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு விளக்கமளித்த பிரகாஷ் ராஜ், தான் ஆன்லைன் சூதாட்ட செயலி மூலம் பணம் சம்பாதிக்கவில்லை என கூறியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட ஆப்களில் ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகின்றன. அதை நம்பி பயன்படுத்திய பலர் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை செய்யும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மறுபக்கம் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்களை வைத்து சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்தும் வருகிறார்கள்.

பிரகாஷ் ராஜிடம் 4 மணி நேரம் விசாரணை
இதுகுறித்து அமலாக்கத்துறையினர் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்ய முடிவு செய்து அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி ராணா டகுபதியை கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜராக சொல்லியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு அனுப்பிய சம்மன் அடிப்படையில், அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பணம் சம்பாதிக்கவில்லை
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்த பிறகு பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களிடம் அளித்துள்ள விளக்கத்தில், "அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தேன். அரசு அதிகாரியாக அவர்கள் தங்களின் கடமையை செய்கிறார்கள். நான் இந்த நாட்டின் ஒரு குடிமகனாக பதில் அளித்தேன். கடந்த 2016 ஆம் ஆண்டு சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்தேன். பிறகு தார்மீக அடிப்படையில் அது தவறு என தெரிந்து அந்த விளம்பரங்களில் நடிப்பதை விட்டுவிட்டேன்.
நான் சூதாட்ட செயலிகள் மூலம் சம்பாதிக்கவில்லை. அதன் மூலம் எனக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை. அதில் பணம் சம்பாதிக்கவும் நான் விரும்பவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதன் பெயரில் ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளேன். என் மனசாட்சிபடி இதில் செயல்பட்டுள்ளேன். அதை அதிகாரிகளிடம் விளக்கமாக கூறிவிட்டேன்.
சுயமாக சம்பாதிக்க வேண்டும்
அவர்கள் எப்போது என்னை அணுகினார்கள், என்ன நடந்தது என்று அனைத்து தகவல்களையும் கூறிவிட்டேன். விசாரணை நிறைவடைந்துவிட்டது. இதில் ஏதேனும் அரசியல் பின்னணி இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதிகாரிகள் தங்கள் கடமையை செய்துள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளேன். மக்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகள் பயன்படுத்துவதை தவிர்த்து சுயமாக சம்பாதிக்க வேண்டும்." என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications