ஆந்திராவில் தனியார் பேருந்து-ஜீப் நேருக்கு நேர் மோதல்... 15 பேர் பரிதாப பலி
கர்னூல்: ஆந்திர பிரதேசத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்னூல் மாவட்டத்தில் எஸ்.ஆர்.எஸ் தனியார் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

பெல்துர்தி அருகே நிகழ்ந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார், உயிரிழந்த 15 பேரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர். பேருந்தில் இருந்த சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது அவர்கள், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications