நுபுர்சர்மாவை சாடிய உச்சநீதிமன்றம்! மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவின் என்ன சொன்னார் தெரியுமா?
ஐதராபாத்: நுபுர் சர்மாவின சர்ச்சை பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதுபற்றிய கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார்.
Recommended Video
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இது பெரும் விவாதமானது. இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்லாமிய நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன. இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பல வழக்குகள் பதிவு
இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்பட பல இடங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. போலீஸ் நிலையங்களில் இருந்து விசாரணைக்கு ஆஜராககோரி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் விமர்சனம்
இந்நிலையில் தான் தனது மிரட்டல் இருப்பதாகவும், அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி நுபுர் சர்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவை கடுமையாக விமர்சனம் செய்தது. ‛‛நுபுர் சர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. நாடு தீப்பற்றி எரிவதற்கு அவர் மட்டுமே தான் காரணம். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா இல்லை அவரால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?. நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' என நீதிமன்றம் கடித்து கொண்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய சட்ட அமைச்சரிடம் கேள்வி
இந்நிலையில் தெலங்கானா ஐதரபாத்தில் பாஜகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று துவங்கிய இந்த செயற்குழு கூட்டம் இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தான் நுபுர் சர்மா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்து பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

மத்திய அமைச்சர் கூறியது என்ன?
மத்திய சட்ட அமைச்சர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் பற்றி நான் கருத்து தெரிவிப்பது முறையல்ல. எனக்கு தீர்ப்பு பிடிக்காவிட்டாலும் அல்லது ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்தாலும் கூட நான் கருத்து தெரிவிக்க விரும்புவது இல்லை. இந்த விவகாரத்தில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். கருத்து கூறும்படி எனக்கும் கோரிக்கைகள் வருகின்றனர். இதுபற்றி பொருத்தமான மன்றத்தில் நாங்கள் விவாதிப்போம். மேலும் உச்சநீதிமன்றத்தின் கருத்து என்பது வாய்மொழியாக கூறப்பட்டுள்ளதே தவிர அது தீர்ப்பின் ஒரு அங்கமாக இல்லை. இதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications