காங்கிரசுக்கு ஷாக்.. இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் அசாருதீன் தெலுங்கானாவில் தோல்வி
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தோல்வியடைந்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அன்றயை தினம் ஒரே கட்டமாக 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 71 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்தது. இறுதியில் காங்கிரஸ் கட்சி 64 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை பெற்றுள்ளது.
மாறாக ஆட்சியில் இருந்த முதல்வர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. பாஜக 8 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இவர் தெலுங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இந்த தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 75 ஆயிரத்து 430 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 204 பேர் ஆண் வாக்காளர்கள். 1 லட்சத்து 77 ஆயிரத்து 207 பேர் பெண் வாக்காளர்கள். 19 பேர் 3ம் பாலினத்தவர்கள்.
இந்த தொகுதியில் அசாருதீனை எதிர்த்து பிஆர்எஸ் கட்சி சார்பில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவான மகந்தி கோபிநாத் போட்டியிட்டார். இன்றைய ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே அசாருதீன் முன்னிலை வகித்து வந்தார். 5வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் 1,092 ஓட்டுகள் அசாருதீன் முன்னிலை பெற்றிருந்தார். 6வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த வாக்கு எண்ணிக்கை 640 ஆக குறைந்தாலும் கூட அவர் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் தற்போது 7 வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அசாருதீன் பின்னடைவை சந்திக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பின்னடைவை எதிர்கொண்டார். இறுதியாக இவர் பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி கோபிநாத்திடம் 16,337 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். வெற்றி பெற்ற மகந்தி கோபிநாத் கடந்த முறையும் இந்த தொகுதியில் வென்ற நிலையில் இப்போது மீண்டும் வாகை சூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications