தெலுங்கானா: சர்ச்சை எம்எல்ஏ-வுக்காக ஒட்டுமொத்த பாஜக தலைகளும் சடுகுடு ஆடும் விசித்திரம்-ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதால கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராஜா சிங் எம்.எல்.ஏ.வை தேர்தலுக்காக மீண்டும் கட்சியில் சேர்க்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
தெலுங்கானாவில் பிற மதங்களை அவதூறாக பேசி தொடர் சர்ச்சைகளில் சிக்கியார் ராஜா சிங் எம்.எல்.ஏ.. நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக ஆகஸ்ட் மாதம் ராஜா சிங்குக்கு எதிராக பெரும் போராட்டங்கள் ஹைதராபாத்தில் வெடித்தன. ராஜா சிங் கைது செய்யப்படாமல் இருந்தால் வன்முறை உருவாகும் சூழ்நிலை இருந்தது. இதனால் வேறுவழியே இல்லாமல் ராஜா சிங் கைது செய்யப்பட்டார். ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலையாகிவிட்டார். அதே நேரத்தில் பாஜக, ராஜா சிங்கை சஸ்பெண்ட் செய்து அறிவித்தது.

ராஜா சிங்-க்கு சீட் இல்லை?: தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் மீண்டும் ராஜா சிங் பெயர் அரசியல் களத்தில் அடிபடுகிறது. ராஜா சிங் வெற்றி பெற்ற கோஷா மஹால் தொகுதியில் மூத்த தலைவர் முகேஷ் கவுட் மகன் விக்ரம் கவுட், பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ராஜா சிங் தரப்பு கொந்தளித்து போயிருக்கிறது.
ராஜா சிங் ஆதரவு கோஷ்டி: பாஜகவில் பல்வேறு தலைவர்களும் ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்த்து அவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பாஜகவில் நபிகள் நாயகம் சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் போல ராஜா சிங்கை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பது இந்த தலைவர்களின் கோரிக்கை. இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களிடையே பெரும் மோதலே வெடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறதாம்.
போர்க்கொடி தூக்கும் ராஜா சிங்: அதேபொல தாம் வெற்றி பெற்ற Goshamahal -கோஷாமஹால் தொகுதியில் மீண்டும் போட்டியிட ராஜா சிங் விரும்புவதாக கூறப்படுகிறது. அப்படி கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை எனில் பாஜகவைவிட்டு விலகி ஆளும் பிஆர்எஸ் கட்சியில் இணைவார் ராஜா சிங் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ராஜா சிங் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தாம் பிஆர்எஸ் கட்சிக்கு தாவ மாட்டேன்; அப்படி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரசியலில் இருந்து சற்று விலகி நின்று 'இந்து' தேசத்துக்கான கடமைகளை செய்வேன் என கூறியுள்ளார். ஒற்றை எம்.எல்.ஏ.வுக்காக ஒட்டுமொத்த பாஜக தலைகளும் முட்டி மோதுகின்றனர்!
-
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications