தெலுங்கானா கே.சி.ஆருக்கே.. "நச்"சென்று அடித்துக் கூறிய வாக்காளர்கள்!
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா மக்கள் சந்திரசேகர ராவின் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் அவரது தனி மாநில உரிமை போராட்டத்துக்காகவும் வெற்றியை வாரி வழங்கியுள்ளனர்.
5 மாநில சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த நிலையில் இந்த மாநில தேர்தல் முடிவுகள் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

முதல்வர்
ஏனெனில் தெலுங்கானா மாநில சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கிறது என்கிற போதிலும் முதல்வர் சந்திரசேகர ராவ் சட்டசபையை கலைத்தார். எனினும் ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் முதல்வராக தொடர்கிறார்.

வெற்றிக்கு காரணம்
இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதில் 87 தொகுதிகளில் ராவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 60 இடங்களே போதுமானது. இந்த வெற்றிக்கு முழு காரணம் சந்திரசேகர ராவ்தான்.

பரிசு
அவரது தனி தெலுங்கானாவுக்கான போராட்டம், பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-ஆவது அணிக்கு வித்திட்டது, விவசாயிகள் முதல் சாதாரண ஏழை மக்கள் வரை அனைவருக்குமான நலத்திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கியதால் இத்தகைய வெற்றியை அவர் பரிசாக கொடுத்துள்ளனர்.

சொல்லிக் கொள்ளவில்லை
இரண்டாவது முறை வெற்றி பெற்றுள்ள டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை. இவரது சொத்து மதிப்புகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.












Click it and Unblock the Notifications