Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜமாகவே பாகிஸ்தானுக்குள் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதா? ஆதாரமே இல்லையே: தெலுங்கானா முதல்வர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது குறித்து ஆதாரமே இல்லையே என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

Telangana Chief Minister Revanth Reddy criticizes that there is no evidence for conducting the surgical strike

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து 4ம் கட்ட தேர்தல் மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது குறித்து ஆதாரமே இல்லையே என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். "40 உயிர்களை பலி கொண்ட புல்வாமா தாக்குதல் என்பது உளவுத்துறையின் தோல்வி. மோடிக்கு எல்லாமே அரசியல், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகதான் எல்லாமே, எனவே மோடியின் சிந்தனை நாட்டுக்கு ஏற்புடையதாக இல்லை.

அவர்கள் எல்லா விமர்சனங்களுக்கும் ஜெய்ஸ்ரீராம் என்று பதில் சொல்கிறார்கள். பாஜகவும், மோடியும் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது. புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் உளவுத்துறை என்ன செய்துக்கொண்டிருந்தது? புல்வாமா சம்பவத்திற்குப் பிறகு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் மூலம் மோடிஜி அரசியல் ஆதாயம் தேட முயன்றார்.

பிரதமரிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புல்வாமா சம்பவம் ஏன் நடந்தது? ஏன் நடக்க அனுமதித்தீர்கள்? உள்நாட்டு பாதுகாப்புக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? IB, R&AW போன்ற ஏஜென்சிகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை? இது உங்கள் தோல்வி.. உண்மையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததா என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. எனவே, உள்நாட்டு பாதுகாப்பு என்பது காங்கிரசின் பொறுப்பு. யாருடைய கையிலும் நாட்டை விட்டுச் செல்ல நாங்கள் தயாராக இல்லை" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்

இவரது விமர்சனத்திற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். "ஹைதராபாத்தில் கோகுல் சேட், மெக்கா மஸ்ஜித், தில்சுக்நகர், லும்பினி பார்க் குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான காங்கிரஸ், தேசப் பாதுகாப்பு பற்றிப் பேசுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தெலுங்கானா முதல்வர் மலிவான அரசியல் மைலேஜுக்காக இந்திய இராணுவத்தின் தியாகங்களை கேள்விக்குட்படுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை" என்று பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+