யுஜிசி விதிமுறைகளுக்கு தெலங்கானா எதிர்ப்பு.. அரசியலமைப்பு மீது தாக்குதல் என ரேவந்த் ரெட்டி கண்டனம்
ஹைதராபாத்: பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) புதிய விதிகளுக்கு தமிழ்நாடு கடும் கண்டனம் தெரிவித்து வந்தது. மற்ற மாநில சட்டமன்றங்களிலும் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தெலங்கானா முதல்வர் யுஜிசி விதிகளுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 9ம் தேதி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு(யுஜிசி) வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதே போன்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா சட்டமன்றப் பேரவைகளிலும் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டுமென்று கோரி, அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில்,
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் என்றும் விமர்சித்திருக்கிறார். தெலங்கானாவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications