தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் அதிரடி கைது.. படுக்கை அறைக்குள் சென்று தூக்கியது போலீஸ்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கானா காங்கிரஸ் செயல்தலைவர் ரேவந்த் ரெட்டியின் வீட்டின் வாசல் கதவை உடைத்து படுக்கை அறையில் இருந்த அவர் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி. இவர் பரபரப்பு அரசியல் நடத்துவதில் வல்லமை படைத்தவர். இவர் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விக்ரதாபாத் மாவட்டத்தில் உள்ள கொண்டக்கல் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராக சட்டமன்றத்திற்கு போட்டியிடுகிறார்.

முதல்வர் பரப்புரை
கொண்டக்கல் தொகுதி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை அங்கு நடைபெற இருக்கும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் பேச இருக்கிறார்.

போலீஸார் கைது
இந்த நிலையில் இன்று கொண்டக்கல் தொகுதியில் முழு அடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்த ரேவந்த் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் ரேவந்த் ரெட்டியை கைது செய்ய இன்று அதிகாலை அவருடைய வீட்டுக்கு போலீஸார் சென்றனர்.

காவல் நிலையத்தில்...
அப்போது வீட்டின் கதவை உடைத்து படுக்கை அறைக்குள் புகுந்து ரேவந்த் ரெட்டியை கைது செய்து போலீஸார் அழைத்து சென்றனர். தற்போது அவரை ஹைதராபாத் புறநகர் பகுதியில் உள்ள ஷம்ஷதாபாத் காவல் நிலையத்தில் போலீஸார் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் அவர் தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேவந்த் ரெட்டி கைது காரணமாக கொண்டக்கல் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு அங்கு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications