தெலுங்கானா: தெரு நாயா? காவல் நாயா? நவம்பர் 30-ல் தெரியும்.. கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி பாய்ச்சல்!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தம்மை தெலுங்கானாவில் காவல் நாய் என கூறி வருகிறார்; கேசிஆர் காவல் நாயா? தெரு நாயா? என்பது வரும் 30-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும் என்றார் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளுக்கு நடுவே பாஜகவும் களம் காண்கிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என பல தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் பிஆர்எஸ், காங்கிரஸ் இரண்டுமே சமமான இடங்களைப் பெற்று தொங்கு சட்டசபைக்கும் கூட சாத்தியம் என்கின்றன சில கருத்து கணிப்புகள்.

தெலுங்கானாவில் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. தெலுங்கானா முதல்வர் கேசிஆர், காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை கடுமையாக தாக்கி வருகிறார். தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ரைபிள் (துப்பாக்கி) தூக்கியவர் ரேவந்த் ரெட்டி. அதனால்தான் ரைபிள் ரெட்டி என்ரு அவருக்கு பெயர். தெலுங்கானா தனி மாநில போராட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் பல நூறு உயிர்கள் பறிபோகின. இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார்.
இதற்கு பதிலடியாக ரேவந்த் ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது; கமரெட்டி தொகுதியில் முதல்வர் கேசிஆர் போட்டியிடுகிறார். ஏற்கனவே கஜ்வெல் தொகுதியில் கேசிஆர் வெற்றி பெற்றதால் அங்கு விளைநிலங்கள் அனைத்தையும் கேசிஆர் குடும்பம் வளைத்துப் போட்டுவிட்டது. கமரெட்டி தொகுதியில் கேசிஆரை ஜெயிக்க வைத்தால் ஒட்டுமொத்த விளைநிலத்தையும் கேசிஆர் குடும்பம் அபகரித்துவிடும். தங்கள் குடும்பத்தை தெலுங்கானாவின் காவல் நாய் என பெருமிதம் பேசுகிறது கேசிஆர் குடும்பம். கேசிஆர் குடும்பம் வெறி பிடித்த தெரு நாயா? காவல் நாயா? என்பது வரும் 30-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும். ஒரு வாக்காளருக்கு ரூ10,000 கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குகிறது கேசிஆர் குடும்பம். கமரெட்டி தொகுதியில் ரூ200 கோடி செலவழித்து ரூ2,000 கோடி மதிப்பிலான நிலத்தை களவாடப் பார்க்கிறது கேசிஆர் குடும்பம். இவ்வாறு ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications