தெலுங்கானா: தெரு நாயா? காவல் நாயா? நவம்பர் 30-ல் தெரியும்.. கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி பாய்ச்சல்!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தம்மை தெலுங்கானாவில் காவல் நாய் என கூறி வருகிறார்; கேசிஆர் காவல் நாயா? தெரு நாயா? என்பது வரும் 30-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும் என்றார் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானாவில் 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டிகளுக்கு நடுவே பாஜகவும் களம் காண்கிறது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என பல தேர்தல் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் பிஆர்எஸ், காங்கிரஸ் இரண்டுமே சமமான இடங்களைப் பெற்று தொங்கு சட்டசபைக்கும் கூட சாத்தியம் என்கின்றன சில கருத்து கணிப்புகள்.

தெலுங்கானாவில் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. தெலுங்கானா முதல்வர் கேசிஆர், காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியை கடுமையாக தாக்கி வருகிறார். தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ரைபிள் (துப்பாக்கி) தூக்கியவர் ரேவந்த் ரெட்டி. அதனால்தான் ரைபிள் ரெட்டி என்ரு அவருக்கு பெயர். தெலுங்கானா தனி மாநில போராட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்ததால் பல நூறு உயிர்கள் பறிபோகின. இதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றார்.
இதற்கு பதிலடியாக ரேவந்த் ரெட்டி தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது; கமரெட்டி தொகுதியில் முதல்வர் கேசிஆர் போட்டியிடுகிறார். ஏற்கனவே கஜ்வெல் தொகுதியில் கேசிஆர் வெற்றி பெற்றதால் அங்கு விளைநிலங்கள் அனைத்தையும் கேசிஆர் குடும்பம் வளைத்துப் போட்டுவிட்டது. கமரெட்டி தொகுதியில் கேசிஆரை ஜெயிக்க வைத்தால் ஒட்டுமொத்த விளைநிலத்தையும் கேசிஆர் குடும்பம் அபகரித்துவிடும். தங்கள் குடும்பத்தை தெலுங்கானாவின் காவல் நாய் என பெருமிதம் பேசுகிறது கேசிஆர் குடும்பம். கேசிஆர் குடும்பம் வெறி பிடித்த தெரு நாயா? காவல் நாயா? என்பது வரும் 30-ந் தேதி நடைபெறும் தேர்தலில் தெரிந்துவிடும். ஒரு வாக்காளருக்கு ரூ10,000 கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்குகிறது கேசிஆர் குடும்பம். கமரெட்டி தொகுதியில் ரூ200 கோடி செலவழித்து ரூ2,000 கோடி மதிப்பிலான நிலத்தை களவாடப் பார்க்கிறது கேசிஆர் குடும்பம். இவ்வாறு ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications