3 மாத கர்ப்பிணி மனைவி தூங்கும் போது சுத்தியலால் அடித்து கொலை! தலைமறைவாக இருந்த காதல் கணவர் கைது!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி தூங்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், அங்கிருந்து பைக்கில் தப்பி தலைமறைவான அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இறந்த மனைவி ஒரு யூடியூபர் என சொல்லப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, வைஷ்ணவி (20) தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்தில் நெரிக்கப்பட்ட தழும்புகளும், உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காதல் திருமணம்: வைஷ்ணவியும், தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு (24) என்பவரும் காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடந்த மே 29, 2025 அன்று ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வரதட்சணை கொடுமை: திருமணத்தின் போது வைஷ்ணவியின் தந்தை 2 குண்டா நிலத்தை வரதட்சணையாகக் கொடுத்தார். இருப்பினும், ஹரிபாபுவின் குடும்பத்தினர் வைஷ்ணவியை ஏற்க மறுத்ததால், இருவரும் வைஷ்ணவியின் தந்தை வீட்டிலேயே வசித்து வந்தனர்.
மேலும் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஹரிபாபு தனது கடன்களை அடைக்க மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வைஷ்ணவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். வைஷ்ணவி கர்ப்பமடைந்த பிறகும் இந்தக் கொடுமை நீடித்துள்ளது.
போலீஸ் அதிரடி கைது:
கொலை நடந்த அன்று அதிகாலை 6 மணியளவில் ஹரிபாபு தனது பைக்கில் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதை உறவினர்கள் பார்த்துள்ளனர். தலைமறைவாக இருந்த ஹரிபாபுவை, கோருட்லா புறநகர்ப் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக ஹரிபாபுவின் தாய் லட்சுமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இதுகுறித்து வைஷ்ணவியின் தந்தை கூறுகையில், "ஹரிபாபு 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டபோது, நான் அவருக்கு மடோபூர் புறநகரில் இரண்டு குண்டா நிலத்தை வாங்கிக் கொடுத்தேன். மேலும் 5 லட்சம் ரூபாய் கடனுக்காகவும் கேட்டுத் தொந்தரவு செய்தார்.
குழந்தைகள் பிறந்ததும் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால் ஹரிபாபு, தாயார் லட்சுமி மற்றும் சகோதரர்கள் ஆனந்த், அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், என் மூன்று மாத கர்ப்பிணி மகளை மேலும் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தினார் " என தெரிவித்துள்ளார்.
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications