3 மாத கர்ப்பிணி மனைவி தூங்கும் போது சுத்தியலால் அடித்து கொலை! தலைமறைவாக இருந்த காதல் கணவர் கைது!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி தூங்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், அங்கிருந்து பைக்கில் தப்பி தலைமறைவான அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இறந்த மனைவி ஒரு யூடியூபர் என சொல்லப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, வைஷ்ணவி (20) தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்தில் நெரிக்கப்பட்ட தழும்புகளும், உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காதல் திருமணம்: வைஷ்ணவியும், தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு (24) என்பவரும் காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடந்த மே 29, 2025 அன்று ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வரதட்சணை கொடுமை: திருமணத்தின் போது வைஷ்ணவியின் தந்தை 2 குண்டா நிலத்தை வரதட்சணையாகக் கொடுத்தார். இருப்பினும், ஹரிபாபுவின் குடும்பத்தினர் வைஷ்ணவியை ஏற்க மறுத்ததால், இருவரும் வைஷ்ணவியின் தந்தை வீட்டிலேயே வசித்து வந்தனர்.
மேலும் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஹரிபாபு தனது கடன்களை அடைக்க மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வைஷ்ணவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். வைஷ்ணவி கர்ப்பமடைந்த பிறகும் இந்தக் கொடுமை நீடித்துள்ளது.
போலீஸ் அதிரடி கைது:
கொலை நடந்த அன்று அதிகாலை 6 மணியளவில் ஹரிபாபு தனது பைக்கில் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதை உறவினர்கள் பார்த்துள்ளனர். தலைமறைவாக இருந்த ஹரிபாபுவை, கோருட்லா புறநகர்ப் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக ஹரிபாபுவின் தாய் லட்சுமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இதுகுறித்து வைஷ்ணவியின் தந்தை கூறுகையில், "ஹரிபாபு 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டபோது, நான் அவருக்கு மடோபூர் புறநகரில் இரண்டு குண்டா நிலத்தை வாங்கிக் கொடுத்தேன். மேலும் 5 லட்சம் ரூபாய் கடனுக்காகவும் கேட்டுத் தொந்தரவு செய்தார்.
குழந்தைகள் பிறந்ததும் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால் ஹரிபாபு, தாயார் லட்சுமி மற்றும் சகோதரர்கள் ஆனந்த், அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், என் மூன்று மாத கர்ப்பிணி மகளை மேலும் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தினார் " என தெரிவித்துள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications