தனி விமானத்தில் ஐதராபாத் வந்த ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள்.. நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா புதிய அரசு
ஐதராபாத்: ஜார்க்கண்ட்டில் புதிய முதல்வராக இன்று சாம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். இவர் சட்டமன்றத்தில் தனக்கு இருக்கும் பெரும்பான்மையை காட்ட வரும் 5 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதனால், கூட்டணியில் உள்ள கட்சி எம் எல் ஏக்களை பாதுகாக்க தொடங்கியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு முறை மட்டுமே அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

மீண்டும் விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம் விசாரணை நடந்த நிலையில், இறுதியில் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, ஜார்க்ண்ட் ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தனி விமானத்தில்: இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் சாம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சாம்பாய் சோரன் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து அவரை பெரும்பான்மையை காட்ட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ள்ளார். இதன்படி முதல்வராக பொறுப்பெற்ற சாம்பாய் சோரன் வரும் 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால் குதிரை பேரத்தை தடுப்பதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளும் கட்சி கூட்டணி எம்பிக்கள் தனி விமானத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
39 எம் எல் ஏக்கள்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளை சேர்ந்த 39 எம் எல்.ஏக்களும் இரண்டு தனி விமானங்களில் ஐதாரபாத் அழைத்து வரப்பட்டனர். எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஷமிர்பேட் பகுதியில் உள்ள லியோனியா ரிசார்ட்டிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இரண்டு நாட்கள் இந்த ரிசார்ட்டில் எம் எல் ஏக்கள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அதன்பிறகு ஜார்க்கண்ட் சென்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள் எனவும் தெரிகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications