ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹோட்டலில் சிக்கிய நடிகை.. கூடவே 38 விஐபிக்களின் பிள்ளைகள்.. உறைந்துபோன தெலுங்கானா.. என்ன நடந்தது

நடிகை உட்பட 38 விஐபிக்கள் சிக்கி உள்ள நிலையில் விசாரணை நடக்கிறது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நள்ளிரவு நடந்த போதை விருந்தில், நடிகை ஒருவர் சிக்கி உள்ளதுடன், 38 பிள்ளைகளும் சிக்கியிருக்கிறார்கள்.. இவர்கள் அத்தனை பேரும் விஜபிக்களின் பிள்ளைகளாம்.. இதை கேட்டு தெலுங்கானா மாநிலம் உறைந்து போயுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு ஸ்டார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.. அந்த பகுதியிலேயே படுபேமஸான ஸ்டார் ஓட்டல் இதுவாகும்.

இங்கு வழக்கமாக வார இறுதி நாட்களில் ஏராளமானோர் குடும்பமாக, நண்பர்களாக வந்து செல்வது வழக்கம்.. அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு மதுவிருந்து நடந்துள்ளது..

நடிகை ஷகிலாவின் மகள் மிலா கர்ப்பமா? தீயாய் பரவும் போட்டோ! நடிகை ஷகிலாவின் மகள் மிலா கர்ப்பமா? தீயாய் பரவும் போட்டோ!

 ஸ்டார் ஹோட்டல்

ஸ்டார் ஹோட்டல்

ஆனால், இந்த பார்ட்டிக்கு அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தாண்டியும் மது விருந்து நடந்துள்ளது.. தெலுங்கானாவை பொறுத்தவரை இரவு 10 மணி வரை மட்டுமே இது போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது... எனினும் அன்றைய தினம், நள்ளிரவு தாண்டியும் மதுவிருந்து நடந்துள்ளது.. இந்த விஷயம் பஞ்சாரா ஹில்ஸ் போலீசாருக்கு தெரியவும், அவர்கள் விரைந்து ஓட்டலுக்குள் நுழைந்தனர்.. அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்..

விஐபிகள்

விஐபிகள்

அப்போதுதான் 148 பேர் அந்த மது விருந்தில் கலந்து கொண்டிருப்பது தெரியவந்தது... இதில், 48 பேர் இளம் பெண்களாம்... அனைவருமே பணக்கார வீட்டு பிள்ளைகள்.. விஐபிக்களின் பிள்ளைகள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த ஸ்டார் ஹோட்டலுக்குள் போலீசார் சோதனையை மேற்கொண்டனர்.. அப்போது, வெள்ளை நிற பவுடர்களுடன் கூடிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டன... அவற்றை பரிசோதித்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது கொகைன் என்ற போதைப் பொருளாம்..

 48 பெண்கள்

48 பெண்கள்

இந்த மதுவிருந்தில் கலந்து கொண்ட 48 இளம்பெண்கள் உட்பட 148 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. அவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகளை சேகரித்த போலீசார், ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, விருந்து நடக்கும் இடத்தில் இதுபோன்ற போதை பொருள் எப்படி வந்தது? யார் சப்ளை செய்தது என்ற அடுத்த விசாரணையும் ஆரம்பமானது.. இந்த விருந்தில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் பிரவுன் சுகர், கொகைன் சப்ளை செய்யப்பட்டுள்ளது..

 நடிகை யார்?

நடிகை யார்?

அதுமட்டுமல்ல, இந்த பார்ட்டியில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா, பாடகர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதைதவிர, காங்கிரஸ் மாஜி அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திர மாநில முன்னாள் டிஜிபி கௌதம் சவாங்கின் மகள், தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கல்லா ஜெயதேவின் மகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.. இப்படி மொத்தம் 38 விஐபிக்களின் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனராம்.

வீடியோ

வீடியோ

இதனிடையே, போலீஸ் பிடியில் சிக்கிய பிரபலங்களின் வாரிசுகள், தாங்கள் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்றும் போலீசாருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நிஹாரிகா கைது தொடர்பாக, அவரது அப்பா நாகபாபு ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.. அதில், போதைப்பொருள் பயன்படுத்திய இடத்தில் என் மகள் இருந்திருக்கிறார், ஆனால், அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதை போலீசாரே உறுதிசெய்துவிட்டனர்.. அதனால் வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

 விசாரணை

விசாரணை

இந்நிலையில், பார்ட்டி நடத்திய ஓட்டல் மேனேஜர்கள் அனில்குமார், அபிஷேக் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.. தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.. இந்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
who is this actress and complaint against hyderabad drug raid 38 vip children
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X