மோசமான பராமரிப்பு.. அசாமில் 1000 டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகள் பாழ்!
கவுகாத்தி : அசாமில் அரசு மருத்துவமனை ஒன்றில் சரியான முறையில் பராமரிக்காததால் 100 மருந்து குப்பிகளில் அடைக்கப்பட்டிருந்த 1000 டோஸ் கோவிட் மருந்துகள் வீணாகி உள்ளன.
அசாமில் சசார் மாவட்டத்தில் உள்ள சில்சர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி மருந்துகள் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல் இருந்துள்ளன. இதனால் 1000 டோஸ் மருந்துகள் பயன்படுத்த முடியாமல் வீணாகி உள்ளன.

இந்த தகவல் ஜனவரி 16 அன்று தான் மாநில சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1000 டோஸ் மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ள தகவல் ஜனவரி 19 இரவு தான் வெளியே கசிந்துள்ளது.
இது பற்றி விளக்கம் அளித்துள்ள அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, போதிய பயிற்சி இல்லாததே இதற்கு காரணம். தடுப்பூசி மருந்துகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியாக பராமரிக்கவில்லை. இது பற்றி ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகள் குழு அனுப்பப்பட்டுள்ளது. ஒருவேளை யாருடைய அஜாக்கிரதையினால் இது நடந்திருந்தால் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
மாவட்ட தடுப்பு மருந்து பிரிவு அதிகாரி அருண் தேப்நாத் கூறுகையில், மருந்துகள் பொதுவாக 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தான் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் சில்சர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெப்பநிலையானது மைனஸ் 5 முதல் 6 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் சென்றுள்ளது. அதனால் தான் மருந்துகள் பாதி உறைந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக அசாம் தேசிய சுகாதார கழகமும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு உரிய பதிலளிக்க தான் தயாராக உள்ளதாக மருத்துவமனை தலைமை சுகாதார அதிகாரி பிகே ராய் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications