வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்- உபியில் ஒருவர் பரிதாப பலி!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் பனி மூட்டத்தால் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக அதிகமாக காணப்படும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள் குளிரால் பெருமளவில் நடுங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மொராதாபாத் அருகே பனி மூட்டத்தால் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர்.
மேலும், தலைநகர் டெல்லியிலும் வானம் தெளிவாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையிலும், இன்று அதிகாலை பல பகுதிகளில் பனி மூட்டம் காணப்பட்டதாகவும் காலைப் பொழுது சில்லென விடிந்ததாகவும் டெல்லிவாசிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications