For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை.. சிஆர்பிஎப் படை பதிலடி!

மத்திய ரிசர்வ் படையினர் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சிஆர்பிஎப் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

 10 Maoists killed, 5 injured in Sukma

இந்நிலையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது சிஆர்பிஎப் வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மத்திய ரிசர்வ் படையின் புதிய தலைவராக ராஜிவ் ராய் பட்நாகர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
At least 10 Maoists were killed and five injured on Thursday in Sukma
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X