குர்ஆன் வாசகத்தை ஒப்பிக்காத 10 வயது சிறுவனை 170 தண்டால் எடுக்க வைத்த மவுலவி
பரேலி: உத்தர பிரதேசத்தில் இருக்கும் மதரஸாவில் குர்ஆனில் உள்ள வாசகம் ஒன்றை ஒப்பிக்க திணறிய 10 வயது சிறுவனை 170 முறை தண்டால் எடுக்க வைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள பில்பிட் பைபாஸ் சாலை பகுதியில் மதரஸா ஒன்று இயங்கி வருகிறது. அந்த மதரஸாவில் படித்து வரும் 10 வயது சிறுவனிடம் மவுலவி குர்ஆனில் இருந்து ஒரு வாசகத்தை ஒப்பிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சிறுவனுக்கு அந்த வாசகம் தெரியவில்லை. இதையடுத்து மவுலவி சிறுவனை 170 தண்டால் எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

சிறுவனும் தண்டால் எடுத்து இறதுயில் மயங்கி விழுந்துவிட்டார். சிறுவன் மயங்கியதும் மவுலவி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் முதுகு எலும்பு மற்றும் விலா எலும்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே இது குறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மவுலவியை தேடி வருகிறார்கள்.
சிறுவனின் தந்தை இது குறித்து கூறுகையில்,
என் மகனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டோம். அந்த ஆசிரியருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications