தொடரும் துயரம்.. ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தற்கொலை என்பது நாடு முழுவதும் தொடர் நிகழ்வாகவே உள்ளது. இந்நிலையில் விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்தின. இப்பிரச்சனை தொடர்பாக நேற்று எழுப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், விவசாயிகள் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலையை பெறுவதை உறுதி செய்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என விமர்சனம் செய்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், 2016ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என தேசிய குற்றப்பதிவு ஆணைய தரவுகள் கூறுகின்றன. 2015-ம் ஆண்டு 12,602 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளன. விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக ராதாமோகன் சிங் குறிப்பிட்டார்.
Recommended Video

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு உயர்த்தி தருவதாக 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி அவர் பேசினார். பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ரூ.3,560 கோடி பிரிமியம் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாமோகன் தெரிவித்தார்.
பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களே அதிகம் பயன்பெறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளித்த ராதாமோகன்சிங், பயிர்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி பலனடைய வேண்டாம் என நினைக்கும் மாநில அரசுகள் இதற்கென தனி நிறுவனங்களை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஆனால் எங்கோ ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் மாறி விவசாயிகளின் தற்கொலை தினசரி செய்தியாகி வருகிறது. தொடரும் துயரத்தை தடுக்க தங்களுக்கு உரிய நிவாரணத்தொகையை அரசு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications