சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 12 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 11 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர்.
சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது இன்று நக்சலைட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட 12 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்திலேயே நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சுக்மா மாவட்டமும் ஒன்று. அங்குள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இன்று காலை வழக்கம் போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்து நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 219 படைப் பிரிவை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகினர். இதில் விழுப்புரம் மாவட்டம் கழுமரத்தை சேர்ந்த சங்கர் என்ற சிஆர்பிஎப் வீரரும் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த போது 10 துப்பாக்கிகளையும் 2 ரேடியோ கருவிகளையும் நக்சல்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
மோடி இரங்கல்:
நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications