Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

16 வருடமாக போலீஸ் கண்ணில் மண்ணை தூவிய மம்மி.. கைதானார் மாஃபியா தலைவி!

நீண்ட நாள் போலீசாரால் தேடப்பட்டு வந்த மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ராஜஸ்தான்: நீண்ட நாள் போலீசாரால் தேடப்பட்டு வந்த மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் என்றாலே கொலை, கொள்ளைக்கு பேர்போன இடம் என்றால் அது மிகையாகாது. ஆம் ராஜஸ்தான் மாநிலத்தில் அந்த அளவிற்கு கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

ராஜஸ்தானில் நடக்கும் கொள்ளைகளை அறிவுறுத்தும் வகையில் எல்லா மொழிகளிலும் பல திரைப்படங்கள் கூட எல்லா எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் கூட தீரன் என்ற படம் வந்துள்ளது. இந்த நிலையில் மம்மி என அனைவராலும் அழைக்கப்படும் மாஃபியா கும்பல் தலைவியின் கதை மிகவும் வியப்புக்கு உரியது.

அன்று தொடங்கி

அன்று தொடங்கி

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங், பசிரான் என்ற பெண்ணை திருமணம் செய்த பிறகு தான் பிழைப்புக்காகக் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் டெல்லி வந்துள்ளார். அப்போது வீட்டு தேவைக்காக பசிரான் சிறு சிறு திருட்டுகளை செய்துள்ளார். அன்று ஆரம்பித்தது இவர்களின் குற்ற செயல். அவர்தான் இப்போது மாமியாக வலம் வருவது.

மாஃபியா

மாஃபியா

தங்களின் குடும்ப கஷ்டத்தை சரி செய்வதற்காக சிறு சிறு குற்றச் சம்பவங்களை செய்யத் தொடங்கிய இவர்கள். பிறகு, மாஃபியா கூட்டத்திற்கே தலைவியாக மாறியுள்ளார் பசிரான் (வயது 62). எட்டு களுக்கு தாயான இவர், தான் பெற்ற மகன்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு செய்யாத குற்றமே இல்லை என்று போலீசார் கூறுகிறார்கள்.

மகன்களுடன் சேர்ந்து கொள்ளை

மகன்களுடன் சேர்ந்து கொள்ளை

தன் மகன்களோடு இணைந்து, கொலை, ஒப்பந்தக் கொலை, கொள்ளை, சட்டவிரோத நடவடிக்கை ஆகியவற்றில் செயல்பட்டுள்ளார். இவரைக் இவருடன் இருக்கும் கூட்டாளிகள் 'மம்மி' என்று அழைப்பார்களாம். இந்த நிலையில் பல வருடங்களாக எல்லா போலீஸ் கண்களிலும் விரல் விட்டு தப்பித்து வந்த பசிரானை, டெல்லி சங்கம் விஹார் பகுதியில் போலீஸார் சில வாரங்களுக்கு முன் கைது செய்துள்ளனர்.

போலீஸ் கூறுகையில்

போலீஸ் கூறுகையில்

பெண் குற்றவாளிகளில் முக்கிய குற்றவாளி என பல மாநில போலீசாலும் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளிதான் பசிரான். இவர், மீது சுமார் 113 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான் அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி சென்றார்.

மீண்டும் கைது செய்தனர்

மீண்டும் கைது செய்தனர்

போலீஸார் பிடியிலிருந்து தப்பி சென்ற பசிரான் சில நாள்களாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், தன் குடும்பத்தினரை சந்திக்க சங்கம் விஹார் பகுதிக்கு நேற்று வந்திருந்தார். அந்த தகவல் முன்கூடியே கிடைத்ததால் அவரை அந்த இடத்திலேயே சுற்றிவளைத்து கைதுசெய்தோம். அவர் தன் மகன்களுடன் சேர்ந்து செய்த குற்றத்திற்கு அளவில்லை.

உடலை எரித்தனர்

உடலை எரித்தனர்

பசிரான் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஒருவரை கடத்தி சென்று காட்டு பகுதியில் வைத்து கொலை செய்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல், மேலும், அந்த கொலை செய்யப்பட்ட உடலை எரித்துள்ளார். இந்த கொலையை செய்த அனைவரையும் காவல்துறையினர் கடந்த மாதம் குண்டோடு கைது செய்தனர். ஆனால், அதில் இருந்து பசிரான் மட்டும் தப்பித்து விட்டார்.

ஒப்பந்த கொலை

ஒப்பந்த கொலை

இதனிடையில், அகப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் இந்த கொலையை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்தது தெரிய வந்தது. பசிரான் கடந்த 16 ஆண்டுகளாகச் சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களைச் செய்து வந்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+