ஹரியானாவில் சரக்கு லாரி மீது ரயில் மோதி விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பலி

Subscribe to Oneindia Tamil

ஹிசார்: ஹரியானா மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற போது சரக்கு லாரி மீது ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

12 killed as train rams into vehicle at unmanned crossing in Hisar

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியில் பாலக் என்ற இடத்தில் ஆளில்லா ரயில்வே கேட் ஒன்றை சரக்கு லாரி ஒன்று கடக்க முற்பட்டுள்ளது. அந்த லாரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த துரி - சிர்சா பயணிகள் ரயில், சரக்கு லாரியின் மீது மோதியது.

இதில், சரக்கு லாரியை ஓட்டி வந்த டிரைவர், 4 குழந்தைகள் உட்பட அதில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

அதிகப்படியான பனிமூட்டம் காரணமாக ரயில் லாரி மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+