12 சுங்கச்சுவாடிகளை இழுத்து மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரத்தில் 12 சுங்கச்சாவடிகள் நாளை முதல் மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலத்தில் தேவைக்கு அதிகமான சுங்கச்சாவடிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி மாநிலத்தில் முதல்கட்டமாக 12 சுங்கச்சாவடிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர மற்ற 53 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், அரசுப் பேருந்து ஆகிய வாகனங்கள் சுங்க வரி செலுத்தாமல் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications