3 ஊசி செலுத்தியும்.. நாய் கடி ரேபீஸ் பாதிப்பால் 12 வயது சிறுமி பலி.. கேரள அதிர்ச்சி
பத்தினம்திட்டா: கேரளாவில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதிப்பால் 12 வயது மாணவி அபிராமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக, கேரளாவில் இதுபோன்று தடுப்பூசி செலுத்திய பின்னரும் ரேபீஸால் உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அச்சுறுத்தலையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மண்டபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மகள் அபிராமி (12) அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

தெருநாய் கடித்தது
இந்த சூழலில், கடந்த மாதம் 14-ம் தேதி காலை கடைக்கு பால் வாங்கச் சென்ற அபிராமியை அங்கிருந்த தெரு நாய் ஒன்று அவரை கடித்து. இதில் கால்களிலும், முகத்திலும் அவருக்கு 6 காயங்கள் ஏற்பட்டன. நாய் கடித்தது என தெரியவந்ததும், உடனடியாக அபிராமியின் தந்தை ஹரீஷ், அவரை பத்தினம்திட்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷீனாவுக்கு முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ரேபீஸ் தடுப்பூசி
அடுத்ததாக, இரண்டு டோஸ் தடுப்பூசிகள் சரியான தேதியில் அருகில் இருந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அபிராமிக்கு செலுத்தப்பட்டன. 4-வது டோஸ் தடுப்பூசி இந்த மாதம் 10-ம் தேதி செலுத்த வேண்டி இருந்தது. இதனிடையே, கடந்த வியாழக்கிழமை சிறுமி அபிராமியின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டது. உடல் முழுவதும் கடுமையான வலியும் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் காய்ச்சலுக்கான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரேபீஸ் பாதிப்பு
ஆனால், மாலையில் அவரது நிலைமை மோசமானது. அவரது வாயில் இருந்து தொடர்ந்து நுரை வந்துள்ளது. கண்கள் மேல்நோக்கி சென்றிருக்கின்றன. இதனால் பயந்துபோன அவரது பெற்றோர், பத்தினம்திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அபிராமியை பரிசோதித்த மருத்துவர்கள், ஷீனாவுக்கு ரேபீஸ் பாதித்துள்ளதாகவும், கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர். இதையடுத்து, அபிராமி கோட்டயம் அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டார்.

மரணம்
அங்கு சிகிச்சை பெற்ற போதிலும் அவருக்கு பாதிப்பு சரியாகவில்லை. தண்ணீரை பார்த்து பயப்படுவது, வெறிபிடித்தது போல கத்துவது, மூச்சுவிட திணறுவது என ரேபீஸ் அறிகுறிகள் நேற்று காலை தென்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு ரேபீஸ் வைரஸ் அவரது மூளையை பாதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொதுவாக, ஒருவருக்கு ரேபீஸ் அறிகுறிகள் தென்பட்டாலே அவரை காப்பாற்றவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications