கையில் சிக்காமல் நழுவும் சிறுத்தை: பெங்களூரில் 129 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
பெங்களூர்: பெங்களூரின் புறநகர் பகுதியான ஒயிட்பீல்டில் சிறுத்தை பிரச்சனை தீராததால் 129 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரின் புறநகர் பகுதி ஒயிட்பீல்டு. பல்வேறு ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் அங்கு உள்ளன. மேலும் ஏராளமான சாப்ட்வேர் என்ஜினியர்கள், பணக்காரர்கள் அப்பகுதியில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒயிட்பீல்டு அருகே உள்ள வர்த்தூரில் இருக்கும் விப்ஜியார் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

சிறுத்தை
பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை காலை முதல் மாலை வரை போராடி பிடித்த வனத்துறையினர் அதை பன்னேருகட்டா விலங்கியல் பூங்காவில் விட்டனர். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் 3 பேர் காயம் அடைந்தநர்.

மீண்டும்
ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை பிடிக்கப்பட்ட பிறகு விப்ஜியார் பள்ளி திங்கட்கிழமை வழக்கம் போன்று செயல்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விப்ஜியார் பள்ளி அருகே ஒரு சிறுத்தை நடமாடுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

விப்ஜியார்
செவ்வாய்க்கிழமை இரவு மக்கள் சிறுத்தை நடமாடுவதை பார்த்ததையடுத்து புதன்கிழமை விப்ஜியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முழுவதும் தேடியும் சிறுத்தை எதுவும் சிக்கவில்லை.

விடுமுறை
சிறுத்தை நடமாடியதை மக்கள் பார்த்தும் அது சிக்காததால் வர்த்தூர், நல்லுரஹள்ளி, தொட்டகனேஹள்ளி, மாரத்தஹள்ளி, கிழக்கு பெங்களூரில் உள்ள 76 தனியார் பள்ளிகள் மற்றும் 53 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது.

தெரியாது
கல்வி அதிகாரி எஸ்.எம். ரமேஷ் கூறுகையில், உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தேடியும் சிறுத்தை எதுவும் சிக்கவில்லை. குழந்தைகளை பள்ளியில் வைத்துக் கொண்டு சிறுத்தையை தேடுவதில் கவனம் செலுத்த முடியாது. அதனால் தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications