அசாம் வார சந்தையில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்.. 12 அப்பாவி மக்கள் சாவு.. பாதுகாப்பு படை பதிலடி
குவகாத்தி: அசாமில் போடோலாந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினரின் பதிலடியில் தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.
கோகரஜஹார் மாவட்டத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த வார சந்தையில் பயங்கரவாதிகள் இன்று மதியம் திடீரென பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகளில் ஒருவன் கையெறி குண்டையும் வீசினான். இதனால் அந்த இடம் புகை மண்டலமானது.

தீவிரவாத தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் பணியை தொடங்கினர். பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை தொடங்கியது.
இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பாவி மக்கள் 12 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலையை எடுத்துரைத்தார். இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு, கூடுதல் பாதுகாப்பு படையினரை அனுப்ப உத்தரவிடப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் நீண்ட காலமாக போடோ தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், இத்தாக்குதலை போடோ தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மறைந்துள்ள தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகிறார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications